India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போலி ஆவணம் மூலம் 21 லட்சம் சிம்கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதை மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு அந்த ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், 21.08 லட்சம் சிம்கார்டு இணைப்புகளை ஆவணங்களுடன் மறுஒப்பீடு செய்யும்படியும், இதில் போலி என்பது உறுதியானால் இணைப்பை துண்டிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2024 ஐபிஎல் தொடரின் குரூப் விவரங்கள் வெளியாகியுள்ளது. குரூப் A-இல், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், குரூப் B-இல் சென்னை, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், ஐதராபாத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும், மற்ற குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். போட்டிகளை குறைக்கவே இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

மொபைல் போன் வெடித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் மீரட்டில், வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. உடனடியாக தீ வீடு முழுவதும் பரவியதில் கலு (6), கோலு (5), நிஹாரிகா (8), சரிகா (12) ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தைகளை காப்பாற்ற முயன்ற பெற்றோர்கள் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, மற்ற வங்கியின் ATMகளில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ATMகளை பயன்படுத்தினால் ₹20 + GST கட்டணமும், SBI ATMகளுக்கு ₹10 + GST கட்டணமும் வசூலிக்கப்படும். வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் போனால் ₹20 + GST கட்டணம் வசூலிக்கப்படும்.

மும்மை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி கண்டதில்லை. 10 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோல்வியுற்று வரும் மும்பை அணி, இம்முறையாவது வெற்றியுடன் தொடங்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு பிரச்னை வந்தால் ஒழித்து கட்டுவோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். துரோகம் எந்த வடிவத்தில் வந்தாலும் நெஞ்சுறுதியுடன் வீழ்த்திக் காட்டுவோம் என்று கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைத்தார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் நாளை அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த அவர், இன்று மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

லக்னோ-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஐபிஎல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்ததில், லக்னோ- 1, ராஜஸ்தான்- 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. காயத்தில் இருந்து மீண்ட லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், 8 ஆண்டுகளுக்கு பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளார்.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை சென்னை திரையங்கில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் கண்டு களித்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் துவக்கப் போட்டியில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றது. இப்போட்டிக்கு பிறகு, நேற்று பயிற்சியின் இடையே தோனி உள்ளிட்டோர் சத்யம் திரையரங்கம் சென்று மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்தனர். தோனி வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள், தல என கோஷமிட்டபடி இருந்தனர்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல, வியூகம் என மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். இதனால் ஒரு தொகுதி, இரண்டு தொகுதி என இல்லாமல் 40 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று கூறினார். திமுகவை விமர்சித்து ரிமோட்டை வீசி, டிவியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள்? இது நமது டிவி, நமது ரிமோட் இங்கு தான் இருக்கும், எப்போதும் உடைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.