News March 24, 2024
மொபைல் வெடித்ததில் நான்கு குழந்தைகள் பலி

மொபைல் போன் வெடித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் மீரட்டில், வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. உடனடியாக தீ வீடு முழுவதும் பரவியதில் கலு (6), கோலு (5), நிஹாரிகா (8), சரிகா (12) ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தைகளை காப்பாற்ற முயன்ற பெற்றோர்கள் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
பிரபல நடிகர் மரணம்… இதயத்தை நொறுக்கும் PHOTO

பார்க்க சாதாரணமாக தெரியும் இந்த போட்டோ, உங்களின் இதயத்தை ஒரு கணம் நொறுக்கலாம். மறைந்த நடிகர் அபிநய், தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ இது. SM-ல் வைரலாகிவரும் இந்த போட்டோதான், அபிநய்யின் வாட்ஸ்ஆப் DP. மேலும், சில நாள்களுக்கு முன் “SLOWLY BUT SURELY” என ஸ்டேட்டஸ் வைத்திருந்துள்ளார். மறைந்த தாயிடம் செல்லப்போவதையே அவர் இப்படி பதிவிட்டிருக்கிறார் என பலரும் வேதனையை பகிர்ந்து வருகின்றனர். RIP
News November 10, 2025
மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும் பானங்கள்

குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு, உணவுப் பழக்கம் ஆகியவை மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்கள். இது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சில பானங்களை அருந்துவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து தப்பிக்கலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்களின் லிஸ்ட்டை ஒவ்வொன்றாக SWIPE செய்து பாருங்கள்.
News November 10, 2025
டெல்லி செங்கோட்டையில் தீவிரவாத சதிச்செயலா?

டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாள்களில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இன்று 2 இடங்களில் 2900 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையில் நடத்த கார் வெடி விபத்து தீவிரவாத சதிச்செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.


