India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக – பாஜக கூட்டணியமைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், பல தோழமைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என்றும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், திடீரென அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோவிடம் இருந்து 10 ஆண்டுகளாக உட்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை BSNL நிறுவனம் வசூலிக்காததால் மத்திய அரசுக்கு ரூ.1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ உடனான மாஸ்டர் சர்வீஸ் ஒப்பந்தத்தை BSNL செயல்படுத்தவில்லை என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. BSNL-ன் உட்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் கூடுதல் தொழில்நுட்பத்திற்கு மே 2014 – மார்ச் 2024 வரை கட்டணம் விதிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
<<15965771>>’டாப் கன்’ திரைப்பட நடிகர் ‘வால் கில்மர்’ (65) இன்று காலை உயிரிழந்தார்<<>>. அவர், 2014ஆம் ஆண்டு முதல் தொண்டை புற்றுநோயால் அவதியுற்று வந்ததாக அவரது மகள் மெர்சைடிஸ் கில்மர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் திடீரென நிமோனியாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதற்கு அளித்த சிகிச்சை பலனளிக்காததால், அவர் உயிரிழந்ததாகவும் மகள் கூறியுள்ளார்.
நவீன உலகில் ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் விந்தணுக்கள் குறைபாடும் ஒன்று. அதனை தவிர்க்க, புகை, போதைப் பழக்கம், வெப்பச் சூழலில் வேலை பார்ப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். சிறுதானிய, புரத உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். விதைப்பை குளிர்ச்சியை உணரும் உறுப்பு என்பதால், இறுக்கமான உள்ளாடை, ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகள் அணியக் கூடாது. SHARE IT.
அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டணி அமைய வேண்டுமானால், அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதிப்பதாகப் பேசப்படுகிறது. இதனையடுத்து, அண்ணாமலை ஆதரவாளர்கள், அதிமுக கூட்டணி வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கை எதிரொலியாக கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டன. இந்நிலையில், இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்வடைந்து 76,617ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 166 புள்ளிகள் அதிகரித்து 23,332ஆக நிறைவடைந்தது. 2,755 பங்குகள் உயர்வுடனும், 1,048 பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.
மார்பக புற்றுநோய் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் தாக்கும். அதுவும், குழந்தையில்லாத ஆண்களை அதிகம் தாக்கும் என்கிறது அண்மை ஆய்வு. மார்பக புற்றுநோய் பாதித்த 1,998 ஆண்களிடம் நடத்திய ஆய்வில் 19.2% பேருக்கு குழந்தைகள் இல்லாததும், 5.6% பேருக்கு மலட்டுத்தன்மை இருந்ததும் உறுதியானது. குழந்தையில்லாத நிலைக்கும், மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பக்காவான ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர், சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். IPL-ல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் என்ற பட்டியலில் தோனியை (7) பின்னுக்குத் தள்ளி, வார்னேவின் சாதனையை அவர் (8) சமன் செய்துள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவுக்காக 6 போட்டிகள், இப்போது பஞ்சாப்புக்காக 2 போட்டிகளில் அவர் வென்றுள்ளார். பட்டியலில் கம்பீர்(10) முதலிடத்தில் உள்ளார்.
2022ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம், 1,70,924 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும், 19,834 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டிலேயே தற்கொலையில் மகாராஷ்டிராவுக்கு (22,746) அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். உதவிக்கு அழைக்கவும்: +91 044 2656 4444
அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக எதிர்த்து களமாடி வருகிறார். இந்நிலையில், ‘நேற்று முளைத்த ஒரு காளான், கட்சித் தொடங்கி 17 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், திமுகவை சீண்டிப் பார்க்கிறார்கள்’ என திமுக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி விமர்சித்துள்ளார். திமுக தொண்டன் தூங்கினால் கும்ப கர்ணன், எழுந்தால் இந்திரஜித் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.