News April 2, 2025
தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை அதிகம்

2022ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம், 1,70,924 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும், 19,834 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டிலேயே தற்கொலையில் மகாராஷ்டிராவுக்கு (22,746) அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். உதவிக்கு அழைக்கவும்: +91 044 2656 4444
Similar News
News January 22, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 22, தை 8 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 22, 2026
அமெரிக்கா காலியாகிவிடும்: ஈரான் மிரட்டல்

அமெரிக்கா, தங்களது உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி-வை தாக்க முயற்சித்தால் அவர்களின் உலகத்தை தீக்கிரையாக்கிவிடுவோம் என்று அமெரிக்காவுக்கு கடுமையான மிரட்டலை ஈரான் ஆயுத படை விடுத்துள்ளது. இதானால், தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், என்னை படுகொலை செய்ய முயன்றால் ஈரானை அழித்துவிடுவோம் என்று டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
News January 22, 2026
ஏர் இந்தியாவால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

ஏர் இந்தியா’ நிறுவனம் சென்னை – துபாய் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த விமான சேவையை மார்ச் 29 முதல் நிறுத்த இருக்கிறது. இதனால், பயணிகளுக்கு டிக்கெட் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கொழும்பு சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து ஏர் இந்தியா வெளியேறுவது போல உள்ளதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


