News April 2, 2025
BSNL நிறுவனத்திற்கு ரூ.1,757 கோடி இழப்பு

ஜியோவிடம் இருந்து 10 ஆண்டுகளாக உட்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை BSNL நிறுவனம் வசூலிக்காததால் மத்திய அரசுக்கு ரூ.1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ உடனான மாஸ்டர் சர்வீஸ் ஒப்பந்தத்தை BSNL செயல்படுத்தவில்லை என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. BSNL-ன் உட்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் கூடுதல் தொழில்நுட்பத்திற்கு மே 2014 – மார்ச் 2024 வரை கட்டணம் விதிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
முடி கொட்டுதா? இந்த பிரச்னையாகவும் இருக்கலாம்…

இன்றைய தலைமுறையினருக்கு பெரிய பிரச்னையே முடி உதிர்வுதான். என்ன பண்ணாலும் முடி கொட்டுவது நிற்பதில்லை என புலம்புபவர்கள் தான் அதிகம். அது மரபியல், ஹார்மோன் பிரச்னைகளையும் சார்ந்தது என்றாலும், சிலரின் Lifestyle-ம் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால், உடனே அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்.
News July 9, 2025
புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
News July 9, 2025
ஆதார் கார்டு முதன்மை அடையாளம் அல்ல: UIDAI

ஆதார் கார்டு ஒருபோதும் ஒரு நபரின் முதன்மை அடையாள அட்டை அல்ல என்று UIDAI சிஇஓ புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிய புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், புதிதாக வழங்கப்படும் ஆதார் கார்டுகளில் உள்ள QR கோடைப் பயன்படுத்தி, இந்த ஆப் மூலம் போலியானதைக் கண்டறியலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.