India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘ரஃபா நகரில் நடத்தும் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க அமெரிக்காவுக்கு, அதிகாரிகள் குழுவை அனுப்புமாறு நெதன்யாகுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

உக்ரைனில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், தங்களை எதிர்த்துப் போரிட்டால் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் அபாயம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 5ஆவது முறை அதிபராகவுள்ள புதின் மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘உலகப் போர் சூழலை யாரும் விரும்பவில்லையென நினைக்கிறேன். ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி இறந்தது மிகவும் சோகமான நிகழ்வாகும்’ என்றார்.

➤ 1895 – லூமியர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர். ➤1944 – நாஜி ஜெர்மானியப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின. ➤ 1945 – ஜப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர். ➤ 2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.

வடகொரியா நேற்று தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை பாகங்கள் விழுந்துள்ளது. இதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் சியோல் பயணம், அமெரிக்கா – தென்கொரியா கூட்டு ராணுவப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா இந்த சோதனையை நடத்தியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பாஜகவில் இணையப் போவதால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதில் எந்தவொரு பலனும் இல்லையென அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். கரீம்கஞ்ச் பாஜக கூட்டத்தில் பேசிய அவர், ‘காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருப்பார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. யாரும் காங்கிரசில் இருக்க விரும்புவதில்லை. ஒவ்வொருவரும் பாஜகவில் சேரவே விரும்புகின்றனர்’ என்றார்.

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி கைக்கோர்த்த படம் ‘புறநானூறு’. 2023 நவம்பரிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமென கூறப்பட்ட நிலையில், இன்னமும் தொடங்கவில்லை. இது குறித்து நடிகர் சூர்யா தனது X பக்கத்தில், ‘புறநானூறு படத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. உங்களுக்கு சிறப்பான ஒன்றை தர வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பில் சந்திப்போம்’ என்றார்.

ஐஃபோனில் ஜெமினி ஏ.ஐ தொழில்நுட்பத்தை இடம்பெற செய்வது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில், ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் ஜெமினி ஏ.ஐ வசதிகள் இடம்பெறும். இதே போன்று, ஐஃபோனில் சாட்ஜிபிடி-ஐ இடம்பெற செய்வது தொடர்பாக ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடனும் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மலையாளத்தில் மிகக் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரேமலு’ ₹100 கோடி வசூல் செய்ததைக் கண்டு மொத்தத் தமிழ்த் திரையுலகமும் மிரண்டுபோயிருக்கிறது. அந்தப் படத்தின் நாயகி மமிதா பைஜுவுக்குக் கோடம்பாக்கத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பல அழைப்புகள் போயிருக்கின்றதாம். கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தும் அவர், எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் நல்ல கதைக்காக காத்திருப்பதாக தெரிகிறது.

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.