India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கக் கூடாது என ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாமக வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுபானம் விநியோகிப்பது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை கூடுதல் கட்டணம் வசூலித்து அதற்கு அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

2024 ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளதால், ஐபிஎல் ‘Fans Park’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெரியத் திரையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண BCCI சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் மார்ச் 22 (CSK – RCB) மற்றும் 23 (KKR – SRH) ஆகிய தேதிகளிலும், கோவை மாவட்டத்தில் மார்ச் 30 (LSG – PBKS) மற்றும் 31 (GT – SRH) ஆகிய தேதிகளிலும் ஒளிபரப்ப உள்ளது.

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதற்கிடையே, அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்ககோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீட்டுக்கடனுக்கான வட்டியை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா 15 புள்ளிகளை இந்த மாத இறுதிவரை குறைத்துள்ளது. அந்த வங்கி இதுவரை வீட்டுக்கடனுக்கு 8.45% வட்டி வசூலித்து வந்தது. அதனை 8.3%ஆக குறைத்துள்ளது. மேலும், சேவை கட்டணத்தையும் ரத்து செய்துள்ளது. முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வீட்டுக்கடனுக்கு 8.4% வட்டி வசூலிக்கின்றன. அதனுடன் ஒப்பிடுகையில் இது 10 புள்ளிகள் குறைவாகும்.

பாஜக-தமாகா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிகளை இறுதி செய்ய ஜி.கே.வாசன், பாஜக அலுவலகம் சென்று அண்ணாமலை உள்ளிட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மீண்டும் பேசுவோம் எனக் கூறிவிட்டு வாசன் அங்கிருந்து சென்றுள்ளார். தமாகா 3 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், பாஜக 2 தொகுதிக்கு மேல் தர முடியாது என கூறுவதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.

2024 ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கலை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் (மார்ச் 22) நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. போட்டிக்கு முன்பு நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், சோனு நிகம், டைகர் ஷெராப் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இளையராஜா மீது எனக்கு பொறாமை இருந்ததே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பயோபிக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், ” எனக்கு இசை பெரிதாக வராது. அதனால், அவர் மேல் என்றும் பொறாமை இல்லை. எனக்கு வராதது எல்லாம் அவருக்கு வருகிறதே என்று ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன். அவருக்கு வரும் புகழையும் பல நேரம் நான் எனதாக்கி கொண்டு வருகிறேன். அவர் எங்கும் நிறைந்திருப்பார்” என்றார்.

மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கோரியிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்தத் தேர்தல்களில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒதுக்கப்படவில்லை. இதனால்
அந்தத் தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை. இந்நிலையில், தினகரன் அளித்துள்ள பேட்டியில், “குக்கர் சின்னம் கோரியுள்ளோம். தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி – பிரேமலதா ஆகியோர் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும் பிரேமலதா, நினைத்ததை சாதித்ததாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு, புதினுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதின் பதவியேற்றுள்ளார். இதையடுத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யப் போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.