news

News March 16, 2025

மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு சென்ற SMS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் பெண்கள், எப்போது அறிவிப்பு வரும் என காத்திருக்கின்றனர். இந்நிலையில், பெண்களின் செல்போன் எண்ணுக்கு தமிழக அரசு தரப்பில் SMS அனுப்பப்பட்டுள்ளது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

இடியாப்ப சிக்கலில் அதிமுக

image

அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டுவர இபிஎஸ், ஒபிஎஸ் தரப்பு கோர்ட்டுகளில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், இபிஎஸ், செங்கோட்டையன் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. 2026 தேர்தல் பணியை அதிமுக தொடங்க இருக்கும் வேளையில், இடியாப்ப சிக்கலாய் அதிகரித்து வரும் பிரச்னை அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

News March 16, 2025

துரோகம், விரோதம்… பாக். மீது மோடி பாய்ச்சல்

image

நல்லெண்ணத்துடன் பாகிஸ்தானுடன் அமைதிக்கான முயற்சியை இந்தியா எடுத்த போதெல்லாம் துரோகம், விரோதமே மிஞ்சியதாக PM மோடி விமர்சித்துள்ளார். பாக்.உடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பியே, 2014இல் தமது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அப்போதைய பாக். PM நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு ஞானம் வந்து அமைதிப் பாதைக்கு திரும்பும் என இந்தியா நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

லெஜண்ட்ஸ் லீக் ஃபைனல்: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!

image

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் தொடரின் ஃபைனலில், சச்சின் தலைமையிலான இந்தியாவும், லாராவின் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், சிம்மோன்ஸ் 57 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 148 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சேஸ் செய்து கோப்பையை வெல்லுமா? கமெண்ட்டில் சொல்லுங்க.

News March 16, 2025

நடிகை பிந்து கோஷின் இறுதி நாள்கள்

image

1980களில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகையான பிந்து கோஷ், இறுதி நாள்களில் வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லாமல் <<15781169>>உயிரிழந்திருக்கிறார்.<<>> அந்த காலத்திலேயே சென்னை தசரதபுரத்தில் பங்களா வீடு வைத்திருந்த அவர், 10 நாய்கள் வளர்த்திருக்கிறார். ஆனால், வயிற்றில் 13 கிலோ சதையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ததால், உடல் நலன் குன்றி சிகிச்சையிலேயே மொத்த சொத்தையும் இழந்து வறுமையில் இறந்திருக்கிறார்.

News March 16, 2025

CISFஇல் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பிங்க

image

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) காலியாக உள்ள 1,161 கான்ஸ்டபிள் நிலையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் சமையலர், பெயிண்டர், டெய்லர் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்படுவர். இந்த வேலைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் இணையதளமான <>இதில்<<>> ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற ஏப்ரல் 3ஆம் தேதியே கடைசி.

News March 16, 2025

உத்தரகாண்ட் நிதியமைச்சர் ராஜினாமா

image

உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் பட்ஜெட் தாக்கலின்போது, உத்தரகாண்ட் ஒன்றும் மலைப்பகுதி மக்களுக்கானதல்ல என அவர் பேசியிருந்தார். இதையடுத்து உத்தரகாண்ட் பாஜக அரசு, மலைப்பகுதி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனால் சர்ச்சை உருவான நிலையில், பதவியை பிரேம்சந்த் அகர்வால் ராஜினாமா செய்துள்ளார்.

News March 16, 2025

ராணா பிரதாப் சிங்கின் வாரிசு காலமானார்

image

புகழ்பெற்ற ராஜபுத்திர அரசரான மகாராணா பிரதாப் சிங்கின் வழித்தோன்றல், அரவிந்த் சிங் மேவார்(81). நீண்டகாலமாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் இன்று அவர் காலமானார். ரஞ்சி கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார். இவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும். பரம்பரை சொத்துகளுக்காக மேவார் குடும்பத்தில் சட்டப் போராட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

2002 குஜராத் கலவரம்… மனம் திறந்தார் மோடி

image

2002 குஜராத் கலவரம் குறித்து PM மோடி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். 2002க்கு முன்பு 250க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடைபெற்று இருப்பதாகவும், ஆனால் 2002 கலவரம் மிகைப்படுத்தி பொய் பிரசாரம் செய்யப்பட்டது, நீதிமன்ற தீர்ப்பால் தன்மீதான களங்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளார். 2002க்கு பிறகு குஜராத்தில் கலவரம் நடக்கவில்லை, தமது நிர்வாகம் அமைதியை நிலை நிறுத்தியது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

News March 16, 2025

ராஷ் ட்ரைவிங்.. என்ன தண்டனை தெரியுமா?

image

சாலைகளில் சிலர் பிறருக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவதை பார்த்து இருப்போம். இது சட்டப்படி குற்றமாகும். இதற்கு BNS, மோட்டார் வாகனச் சட்டங்களில் தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளது. BNS சட்டத்தில் 6 மாதம் சிறை (அ) ரூ.1,000 அபராதம் (அ) 2 தண்டனையும் சேர்த்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில், 2 ஆண்டு வரை சிறை, ரூ.10,000 அபராதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!