News April 22, 2025
MP-க்களே எஜமானர்கள்.. தன்கர் மீண்டும் பேச்சு!

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவருக்கு காலநிர்ணயம் விதித்த SC-க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களே உச்சபட்ச எஜமானர்கள் எனக் கூறியுள்ளார். டெல்லியில் பல்கலை நிகழ்வில் பேசிய அவர், நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட அதிக அதிகாரம் கொண்டது எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
பொங்கல் விடுமுறை.. வந்தது HAPPY NEWS

பொங்கல் விடுமுறையையொட்டி தமிழகத்தில் 500+ சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலன் கருதி வழக்கமான ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்றும், மதுரை, திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெட்டிகள் அதிகரிப்பால் Waiting List பற்றி கவலைப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 15, 2025
தவெக தொண்டர்களுக்கு N.ஆனந்த் அழைப்பு

SIR-க்கு எதிராக தவெக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என N.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். SIR பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் இருப்பதாகவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார் . SIR-க்கு எதிராக நாளை காலை 11 மணி அளவில் தவெக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் வர முடியுமா?

மனிதனை ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது. அப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒன்றுதான் cryopreservation. அதாவது, ஒரு சடலம் -196°C வெப்பநிலையில் திரவ நைட்ரஜனில் புதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. ரத்தம் உறைதல், செல்களுக்கு சேதம் ஏற்படுவதைத் இது தடுக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் இறந்த ஒருவரை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வந்தால், இந்த உடல் பயன்படுத்தப்படும்.


