India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் 19.8 சதவீத மக்களுக்கு நடிகர் விஜய்யை பிடித்திருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. Peoples Studies நிறுவனம், அதிக மக்களால் விரும்பப்படும் நடிகர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அதில், அஜித் – 12.6%, ரஜினி – 12.2%, சூர்யா – 3.6%, கமல் – 3.3%, தனுஷ் – 1.9% என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 19.5% மக்கள் யாரையும் பிடிக்காது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்.19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு வந்த புகாரின் அடிப்படையில், சென்னை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட 44 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விவரங்கள் தெரியவரும்.

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அமெரிக்காவில் 62 வயதான நபருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது கடந்த காலங்களில் தோல்வியடைந்தது. ஆனால் இம்முறை மருத்துவ நிபுணர்கள் வெற்றி கண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த நாள் இன்று (ஏப்.5). கிரிக்கெட் மீதான தீராக் காதலால் TTE வேலையை உதறிவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 2005ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தோனி 148(123) ரன்களை குவித்தார். இந்தப் போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விட பெரிய ரவுடியை பாஜகவில் சேர்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலத்தில் பாமக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காந்தி இன்று தமிழகத்தின் அமைச்சராக உள்ளார். சுடுகாட்டுக் கூரை வழக்கில் சிக்கியவர் தற்போது சேலம் திமுக வேட்பாளராக இருக்கிறார்’ என்றார்

பவால், சிச்சோரே ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, அடுத்ததாக ராமாயண கதையை படமாக்கவுள்ளார். இப்படத்தில் யஷ், ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் ஆஸ்கர் வென்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் உடன் இணைந்து நமது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். மண்டபம் அருகே கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் இருந்தபோது, படகில் வந்த மூவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இலங்கையில் இருந்து அவர்கள் தங்கக் கட்டிகளை கடத்தி வந்து மணலி தீவில் கடலுக்குள் வீசிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த அதிகாரிகள் 10 கிலோ தங்கக் கட்டிகளை மீட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குப்பாண்டாம்பாளையம் பகுதியில் இளைஞர்கள் ஓட்டிவந்த கார், வேகமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில், காரில் இருந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு கட்டாயமில்லை. மாநிலங்கள் விரும்பினால் தேர்வை நடத்தி கொள்ளலாமென அறிவித்துள்ளது. இதற்கு, நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? என கேள்வி எழுப்பியுள்ள சீமான், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவோம் எனப் பேசுவதே முட்டாள் தனம் என விமர்சித்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான மருந்து விளம்பரங்களால் சர்ச்சையில் சிக்கியுள்ள பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், சிறைத் தண்டனையும் சந்திக்க நேரிடும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில், முதல் முறை குற்றத்திற்கு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
Sorry, no posts matched your criteria.