News April 5, 2024
நீட் மாணவர்கள் தற்கொலைக்கு பொறுப்பேற்பது யார்?

காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு கட்டாயமில்லை. மாநிலங்கள் விரும்பினால் தேர்வை நடத்தி கொள்ளலாமென அறிவித்துள்ளது. இதற்கு, நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? என கேள்வி எழுப்பியுள்ள சீமான், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவோம் எனப் பேசுவதே முட்டாள் தனம் என விமர்சித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
EPS கோரிக்கையால் மோடி ராஜதந்திரம்

இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் மூலம் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் EPS தொடர் கோரிக்கை வைத்தார். தற்போது மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால், திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருப்பார்கள்; மக்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும் என்றார்.
News February 10, 2026
பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

மாநிலங்களவையில் பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் பேசியது நாடாளுமன்ற மரபுகளையும், அவையின் உரிமையும் மீறும் செயல் என அவர் கூறியுள்ளார்.
News February 10, 2026
4-வது நாளே பிரேமலதா அதிர்ச்சி

கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், தேமுதிக அலுவலகம் வெறிச்சோடியது. பிப்.12-க்குள் மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், 4-வது நாளான நேற்று (பிப்.9) விருப்ப மனுவை வாங்க ஒருவர் கூட வரவில்லை என்பதால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.


