India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிநுட்பமான நுண்ணறிவு கொண்டவை தேனீக்கள். சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை நுகர்ந்து தெரிந்து கொள்ளமுடியும். ஒரு தேனீக்கு 5000 நாசித்துவாரங்கள் உள்ளன. ஒரு பவுண்டு தேனை சேகரிக்க எறக்குறைய 80,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. 60,000 மலர்களுக்கு முப்பத்தேழு லட்சம் தடவை தேனீக்கள் பறந்து செல்ல வேண்டியிருக்கிறது. மனிதகுலம் தேனீக்களின் மகத்துவத்தை அறிந்து தேனை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிக பந்துகளை சந்தித்து சதமடித்த வீரர் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 67 பந்துகளை சந்தித்து கோலி சதமடித்தார். இதன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து சதமடித்த வீரர்கள் பட்டியலில் மணீஷ் பாண்டேவுடன் இணைந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னதாக 66 பந்துகளை சந்தித்து சச்சின், பட்லர், வார்னர் உள்ளிட்ட மூவரும் சதமடித்துள்ளனர்.

➤1946 – பிரான்சிடம் இருந்து சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
➤1948 – உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.
➤1948 – சீனாவில் ஷாங்காயில் பௌத்த மத தலம் எரிந்ததில் 20 புத்த குருக்கள் உயிரிழந்தனர்.
➤1990 – எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர். 2003 – அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின.

கர்ப்பிணிகள் காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும், அடிக்கடி மயக்கமும் வராது. வயிற்றில் குழந்தை வளர வளர அதிகமாக சாப்பிட முடியாது, சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்களை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று, அதுகுறித்து பயப்பட தேவையில்லை.

தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக வெளியான வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரியை மரியாதையாக பேசுமாறு கூறினேன். ஆனால், அந்த வீடியோவில் பல காட்சிகள் எடிட் செய்து போட்டுள்ளார்கள். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன் என அவர் கூறியுள்ளார். முன்னதாக, தேர்தல் அதிகாரியை அவர் மிரட்டும் வீடியோ வெளியானது.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 127 ▶குறள்: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ▶விளக்கம்: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

பாஜகவுடன் முதல்வர் நட்பு பாராட்டியிருந்தால் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். எத்தனை நெருக்கடி வந்தாலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள தயார் என்ற நெஞ்சுரத்தோடு பாஜகவை முதல்வர் எதிர்த்து வருகிறார். திமுக இருக்கக் கூடாது என மோடி, அமித்ஷா நினைப்பதாக கூறிய அவர், யார் என்ன நினைத்தாலும் மதவெறி பாஜகவை முதல்வர் நாட்டை விட்டு விரட்டி அடிப்பார் எனக் கூறினார்.

சீரியல் பார்ப்பதை பெண்கள் நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாமியார், மருமகள் சண்டை தொடர்பான சீரியல்கள் நிஜ வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. தேர்தல்கள், அரசியல் உண்மைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பெண்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அவர், நேரத்தை விரயம் செய்யும் இது மாதிரியான விஷயங்களை செய்யக் கூடாது எனக் கூறினார்.

இன்று (ஏப்ரல் 07) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

உடல் முக்கியமான உறுப்பு கண். கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகிறது. இதனால், கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதுவே நாம் கண்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.
Sorry, no posts matched your criteria.