India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஏப்ரல் 08) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

கெஜ்ரிவால் இருக்கும் வரை டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். ஆனால், ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என பிரதமர் மோடி கூறுவதாக விமர்சித்த அவர், நேர்மையாக ஆட்சி நடத்திய காரணத்திற்காக கெஜ்ரிவாலை பொய் குற்றச்சாட்டு அடிப்படையில் பாஜக கைது செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.

ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு கடினமான சூழ்நிலைகளைக் கடக்க பேருதவியாக இருக்கும். இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர! வெற்றியாளர்களும், வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும். நகைச்சுவை வாழ்வின் தேவையான சுவை.

இன்று (ஏப்ரல் 08) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

➤ ம.பி-யில் பிரதமர் பங்கேற்ற ஊர்வலத்தில் விபத்து
➤ நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை
➤ திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்கு சேகரிப்பு
➤ தீபாவளிக்கு வெளியாகிறது வேட்டையன்
➤ டெல்லிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி வெற்றி
➤ டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை பெற்ற மும்பை அணி

ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வை ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது மற்ற நிறுவனங்களிலும் எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 1.7% சரிந்திருந்தது.

டெல்லியின் திமர்பூர் பகுதியில் சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டியை தர மறுத்த இளைஞரை, 2 சிறுவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஆட்டோவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்ட போலீசார், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். சிறுவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், தற்போது 10.93 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதை 2030ஆம் ஆண்டுக்குள் 45 ஜிகாவாட்டாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜீரணக் கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண்ணால் அவதிப்படுவோர் மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கலாம். பாலில் சிறிது தேன் கலந்து அருந்த, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். பொதுவாக, துவர்ப்புத்தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு நல்லது. இதனை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம்.

மத்திய பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலில், தடை செய்யப்பட்ட பகுதியில் நின்று 2 பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள், காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பெண் காவலர்கள் காயமடைந்த நிலையில், அந்த பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.