India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதல்வர் ஸ்டாலினுக்கும், இபிஎஸ்ஸுக்கும் தொலைநோக்கு சிந்தனை உள்ளதா?, இரு கட்சிகளுக்கும் திட்டமிடுதல் என்பதே கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவர் செய்த சாதனைகளை கூறும் அரசியலாக இருக்க வேண்டும். எனவே, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7%ஆக இருக்குமென ஆசிய வளர்ச்சி வங்கி புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி முன்பு கணித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த விகிதத்தை 7%ஆக தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி 7.2%ஆக இருக்குமென்றும் அந்த வங்கி கணித்துள்ளது.

பெங்களூரு அணியில் பும்ரா இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்போம் என அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார். மும்பைக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய அவர், “பும்ரா சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தினார். நாங்கள் 250 ரன்கள் வரை எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் முடியாமல் போனது” என்றார். நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் 5 முக்கிய விக்கெட்டுக்களை பும்ரா கைப்பற்றினார்.

3-ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்., 19இல் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 2ஆம் கட்ட தேர்தல் ஏப்., 26இல் 94 தொகுதிகளில் நடைபெறுகிறது. 3ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு இன்று தொடங்கும் நிலையில், மே 7இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப் 19, ஏப் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

பிரசாரத்தில் பாஜக மீது கடும் குற்றச்சாட்டு வைக்காதது ஏன் என அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பாஜக மீது கடும் குற்றச்சாட்டு வைப்பதில்லை என கூறப்படுவது உண்மையில்லை என்றும், தேவைப்படும் இடத்தில் பாஜகவை விமர்சிப்பதாகவும் தெரிவித்தார். திமுக போல தனிப்பட்ட குற்றச்சாட்டை அதிமுக யார் மீதும் வைப்பதில்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.

மறைந்த நடிகர் அருள்மணி, அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆவார். ஜெ., மீது இருந்த ஈர்ப்பால் அதிமுகவில் இணைந்து, தீவிர அரசியலில் ஈடுபட்டார். தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சியினரை தனது பேச்சுத்திறனால் கடுமையாக தாக்கினாலும், அனைவருடனும் நட்புடன் பழகக்கூடியவர். தற்போது, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, வாக்குச்சேகரித்து வந்த நிலையில், அவரின் மரணம் அதிமுகவினருக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

இந்திய அணுசக்தி கழகம் 400 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. Executive Trainee பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: B.Sc., B.E.,B.Tech., ME., M.Tech. வயது வரம்பு: 21- 26. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. தேர்வு: GATE மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வு. ஊதிய வரம்பு: ₹55,000/-. கூடுதல் தகவல்களுக்கு <

மோடி உள்பட பாஜக தலைவர்களை சிறையில் அடைப்போம் என்று லாலு பிரசாத் மகள் மிசா பாரதி கூறியுள்ளார். பிகாரின் பாடலிபுத்திரம் தொகுதியில் போட்டியிடும் அவர், மத்திய அரசில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் பிரதமர் மோடி சிறையில் இருப்பார் எனத் தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கு ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழல் செய்து சிறைக்கு சென்றவர்கள் பிரதமரை கைது செய்வேன் என்பது கண்டனத்துக்குரியது என்றார்.

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்றும் வரவேண்டும். குலதெய்வ கோயில் தூரமாக இருப்பவர்கள் அல்லது குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி படையலிட்டு வழிபட வேண்டும்.

நடிகர் அருள்மணி (65) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.