India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தோல்வி உறுதியானதால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்களிக்க விரும்பாமல், தேர்தலைப் புறக்கணித்ததால்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையை அளிக்கிறது. காந்திநகரின் களநிலவரங்களை பாஜகவினரிடம் கேட்டறிந்தபோது, பல சந்தேகங்கள் நீங்கின. NDA கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்” என்றார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குஜராத், உ.பி, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், தமிழகத்தில்தான் மாவட்ட வாரியாக உதவி ஆணையர் தலைமையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறியது. அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, போதைப் பொருளைத் தடுக்க காவல்துறைக்கு உரிய பயிற்சி வழங்க பரிந்துரைத்தது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான செயல்திட்டத்தை கடைபிடிக்குமாறு, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், தி.மலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சையில் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து நாள்தோறும் தகவலைப் பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரை இலவசமாக ஒளிபரப்பவுள்ளதாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனின் படத்துடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைலில் ஒவ்வொரு போட்டியின், ஒவ்வொரு பந்தையும் இலவசமாகப் பார்க்கலாம்’ என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, 50 ஒவர் உலகக் கோப்பையை ஹாட்ஸ்டார் இலவசமாக ஒளிபரப்பியது.

2 ஆண்டுகளுக்கு முன் கோமாவில் இருந்த மாணவர் CBSE +2 தேர்வில் 93% மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த மாதவ், 2021இல் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் கோமாவுக்கு சென்றார். அவரது மூளையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டு பேச்சு, புரிதல், எழுத்து போன்ற முக்கிய செயல்பாடுகள் முடங்கின. இந்நிலையில், அறுவைச் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர், +2 தேர்வில் சாதித்துள்ளார்.

சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீசார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதால், தீவிரவாத பின்னணி ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சை, விருதுநகர், கடலூர், சேலம், நெல்லை, குமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

எவரெஸ்ட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் மசாலா பொருள்களின் தரம் குறித்து ஆய்வுசெய்து வருவதாக நியூசிலாந்தின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அந்த மசாலா பொருள்களில், புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாகக் கூறி, ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்தன. தற்போதைய நிலையில், அப்பொருள்களின் தரம் குறித்து அமெரிக்க அரசு ஆய்வுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல்லில் அறிமுகம் செய்யப்பட்ட ‘இம்பேக்ட் வீரர்’ விதி நன்றாக இருப்பதாக, ராஜஸ்தான் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இது ஒரு நல்ல விதி என்று தான் நினைப்பதாகவும், கடந்த ஆண்டு ஐபிஎல்லில் தாங்கள் நிறைய இறுக்கமான முடிவைப் பெற்றோம் என்பதை அனைவரும் பார்த்தனர் என்றும் கூறினார். மேலும், இந்த விதி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணனின் மனைவியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர். தங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி, மோசடி செய்ய முயன்றதாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.