News May 15, 2024
‘இம்பேக்ட் வீரர்’ விதி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐபிஎல்லில் அறிமுகம் செய்யப்பட்ட ‘இம்பேக்ட் வீரர்’ விதி நன்றாக இருப்பதாக, ராஜஸ்தான் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இது ஒரு நல்ல விதி என்று தான் நினைப்பதாகவும், கடந்த ஆண்டு ஐபிஎல்லில் தாங்கள் நிறைய இறுக்கமான முடிவைப் பெற்றோம் என்பதை அனைவரும் பார்த்தனர் என்றும் கூறினார். மேலும், இந்த விதி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 16, 2025
EPS சிங்கம், பாஜக புலி: KT ராஜேந்திர பாலாஜி

சிங்கம்-புலி கூட்டணியாக ADMK – BJP கூட்டணி உள்ளதாக KT ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிங்கமாக EPS-ம் புலியாக BJP-யும் உள்ளனர் என்ற அவர், EPS வீட்டை நோக்கி ஜனவரியில் எத்தனை கட்சி தலைவர்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக என்ற கட்சியை சட்டமன்றத்திற்குள் நுழைய வைக்காமல் இருக்க தேவையான தேர்தல் உத்திகளை EPS மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
News November 16, 2025
ரஜினி வீட்டில் காலையிலேயே பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் K.S.ரவிக்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, இருவரின் வீடுகளிலும் சோதனை செய்ய தேனாம்பேட்டை போலீசார் விரைந்தனர். ஆனால், <<18274391>>ரஜினி <<>>தரப்பில் சோதனை வேண்டாம் என மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் K.S.ரவிக்குமார் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
News November 16, 2025
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்: மோகன் பகவத்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறுகிறார்கள் என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பெரும் பகுதியினர் இன்னும் பின் தங்கியே உள்ளனர். உலக மக்கள் தொகுதியில் வெறும் 4% பேர், 80% உலக வளங்களை பயன்படுத்துகின்றனர். வளங்கள் யாரிடமிருந்து எடுக்கப்படுகிறதோ, அவர்கள் முன்னேற்றத்தின் பலனை பெறுவதில்லை என கூறியுள்ளார்.


