India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோல்வி பற்றி விளக்கமளிக்க கடினமாக இருப்பதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய அவர், “எந்த ஒரு அணியின் கேப்டனுக்குமே ஏன் தோல்வி அடைந்தோம், எந்த இடத்தில் வெற்றியை தவறவிட்டோம் என்று கூறுவதற்கு சங்கடமாக இருக்கும். அதே போன்ற ஒரு மன நிலையில் தான் இருக்கிறேன்” என அவர் வேதனை தெரிவித்தார். முன்னதாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி வெற்றியை நழுவ விட்டது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவே, பயங்கரவாதம் பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். 70 ஆண்டுகளாக 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய காங்கிரசால் முடியவில்லை. பயங்கரவாதத்தின் மூலத்தை அடியோடு அழித்து, 370வது பிரிவை பிரதமர் மோடி நீக்கியதாக கூறிய அவர், அதனால் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நம்மை கண்டு பயந்து நடுங்குவதாகவும் தெரிவித்தார்.
மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி சாப்பிடுவது மிகவும் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் வைட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்போர்ட். அதே போல பப்பாளிப் பழம் சாப்பிடுவது கண் பார்வைக்கு மிக நல்லது.
➤ ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
➤ எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
➤ எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
➤ எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
➤ ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
தேர்தலுக்கு பின் அதிமுகவில் மாற்றம் வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனியில் போட்டியிடும் தினகரன் 50% வாக்குகளை பெற்று வெல்வார் என்ற அவர், ஓபிஎஸ் வெற்றி முடிவு செய்யப்பட்ட ஒன்று எனத் தெரிவித்தார். சுயேச்சையாக போட்டியிட்டு ஓபிஎஸ் வெற்றி பெற்ற பின்பு தென் மாவட்ட மக்கள் அவர் பின்னால் அணி திரளுவார்கள். தேர்தல் முடிவில் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
➤1829 – கொழும்பு, புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது
➤1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.
➤1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
➤1909 – டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.
➤1970 – அப்பல்லோ 13 விண்கலம் ஏவப்பட்டது.
➤2012 – இந்தோனேசியாவில் சுமத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக நேற்றை ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று அசைக்க முடியாத அணியாக இருந்த ராஜஸ்தான், தனது முதல் தோல்வியை இந்த தொடரில் பெற்றுள்ளது. ஆனாலும், அந்த அணி 8 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
◾விளக்கம்: நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
வயதானவர்கள் தடுமாறி விழுந்தால் எலும்புகள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். எனவே அவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது, வெளிச்சம் இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும். கால் தடுமாறி பிசகிவிட்டால் நீவிவிடுவதை தவிர்க்க வேண்டும். எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால் கூட நீவிவிடுவதன் மூலம் அது அதிகமாகும்.
பிரதமர்களை உருவாக்கும் இயக்கம் திமுக என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசில் பங்கெடுத்து திமுக என்னென்ன சாதனைகளை செய்துள்ளது என்று பலமுறை மக்களிடம் எடுத்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர், அதிமுக மத்திய அரசியல் அங்கம் வகித்த போதெல்லாம், திமுக ஆட்சியை கலைக்க வேண்டும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று மட்டுமே ஆட்சியாளர்களிடம் அவர்கள் கோரிக்கை வைத்ததாகவும் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.