India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தலான அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் அளித்து வருகிறது. அந்த வகையில், குரல் செய்தியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் & காது கேளாதவர்களுக்கு குரல் குறிப்புகளை உரையாக மாற்றி தருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (மார்ச் 23) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ரூ.7,500-க்கு விற்பனையான டிக்கெட்டுகள், இம்முறை ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. டிக்கெட் விலை ரூ.1,700 தொடங்கி ரூ.6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கும்ப ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தது 12 ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசியினருக்கு ராஜ யோகம் காத்திருக்கிறது. அந்த வகையில் ரிஷபம், விருச்சிகம், தனுசு மற்றும் கும்ப ராசியினர் இனிமேல் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகிறது. குறிப்பாக ஆடம்பர வாழ்க்கை, வழக்குகளில் வெற்றி, நிலப் பிரச்னைகளில் சுமூகத் தீர்வு, கடன் தொல்லையில் இருந்து விடுபடுவது போன்ற பல்வேறு சுப பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜை, நடிகை காயத்திரி கிண்டலடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் பாடல் குறித்து, “உங்கள் படத்தில் காதல் செய்தால் தலையை வெட்டிவிட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்” என அவர் காமெடியாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் இயக்கும் இந்த பாடலை கமல்ஹாசன் எழுத, ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “தோல்வி பயம் காரணமாகவே, பாஜக அரசு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக அரசு இடைவிடாமல் துன்புறுத்தி வருகிறது. பாஜகவின் இத்தகைய செயல் பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது. இது ஜனநாயகத்தின் சீரழிவு மற்றும் அதிகார துஷ்பிரயோகம்” எனக் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலமோசடி வழக்கில் ஜன.31இல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “15க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. நானே களத்தில் நின்று தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க போகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன்” என்றார்.
▶இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் – சிவகங்கை
▶தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் – தென்காசி
▶அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – தேனி, திருச்சி
▶தமிழ் மாநில காங்கிரஸ் – ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி
▶அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு – ராமநாதபுரம்
▶புதிய நீதி கட்சி – வேலூர்
▶இந்திய ஜனநாயக கட்சி – பெரம்பலூர்
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, “சதிகாரர்” என ED குறிப்பிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஆம் ஆத்மி கட்சிக்கு ₹100 கோடி வழங்கப்பட்டதாகவும், சில குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் கெஜ்ரிவாலுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் நாயர் என்பவர் கெஜ்ரிவால் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக ED கூறியுள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட உடனே இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த செய்தியை திசை திருப்புவதற்காகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.