news

News April 10, 2024

அதிமுகவினரை கத்தியால் குத்திய திமுகவினர்

image

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையின் போது, சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று கத்திக்குத்து அளவிற்கு சென்றுள்ளது. திருச்சி, லால்குடியில் கட்சிக்கொடி கட்டிய பிரச்னையில் அதிமுக நிர்வாகிகளை திமுக நிர்வாகிகள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் சட்ட ஒழுங்கு பிரச்னை வருமோ என்று அச்சப்படும் அளவிற்கு இச்சம்பவம் பார்க்கப்படுகிறது.

News April 10, 2024

10 ஆண்டுகளில் 75,000 ஆக உயர்ந்த சென்செக்ஸ்

image

38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, 20,000ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தில் 75,000 புள்ளிகளை கடந்து 75,124ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 50,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

News April 10, 2024

பிரக்ஞானந்தா, விதித் போட்டிகள் டிரா

image

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 5ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா டிரா செய்துள்ளார். ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சிக்கு எதிரான இப்போட்டியில், அவர் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி டிராவில் முடிந்ததால், இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. மேலும், ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான மற்றொரு போட்டியில், விதித் குஜராத்தி டிரா செய்தார்.

News April 10, 2024

உச்சத்தில் பங்குச்சந்தை

image

பங்குச்சந்தை புதிய உச்சத்தை நோக்கி வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரித்து 74,931 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 68 புள்ளிகள் அதிகரித்து 22,713 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. Indian Oil Corp, TVS உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.

News April 10, 2024

370 தொகுதிகளில் வெற்றி என எப்படி கூறுகிறார் மோடி?

image

370 தொகுதிகளில் பாஜக வெல்லும் என மோடி, எதை வைத்து கூறுகிறார் என விவாதம் எழுந்துள்ளது. 3வது முறையாக அவர் தலைமையில் மீண்டும் பாஜக போட்டியிடுகிறது. பிரசாரம் தொடங்கியது முதல் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும், 370இல் பாஜக மட்டும் வெல்லும் என மோடி கூறி வருகிறார். எதை வைத்து அவர் இவ்வாறு கூறுகிறார்? 370 தொகுதிகளில் வென்றால் என்ன அதிகாரம் கிடைக்கும் என விவாதம் எழுந்துள்ளது.

News April 10, 2024

பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடக்கம்

image

வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது. ஒரு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம், பெயர் மட்டுமே பொருத்த முடியும். இதனால், அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.18ம் தேதி மாலை அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் வகையில் இப்பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது.

News April 10, 2024

திக்குமுக்காட வைக்கும் தங்கம் விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து, மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,705க்கும் விற்பனையாகிறது. கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.89க்கும், கிலோ வெள்ளி ரூ.89,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் தங்கம் விலை ரூ.2000, வெள்ளி விலை ரூ.7.40 உயர்ந்துள்ளன.

News April 10, 2024

மக்களவையில் கவுண்டிங் தொடங்குமா தேமுதிக?

image

2005இல் தொடங்கப்பட்ட தேமுதிக, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த அக்கட்சி, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 29 தொகுதிகளில் வென்றது. பிறகு நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியே கிடைத்தது. இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, வெற்றி பாதைக்கு திரும்புமா என பொறுத்திருந்து காண்போம்.

News April 10, 2024

தேர்தல் செலவுக்கு ₹200 கோடி ஹவாலா பணம்

image

தேர்தலையொட்டி, ₹200 கோடி ஹவாலா பணத்தை துபாயிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவர திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. மலேசியாவிலிருந்து இருந்து நாடு கடத்தப்பட்ட ஹவாலா ஏஜென்ட் வினோத்குமார் என்பவரிடம் நடந்த விசாரணையில், அவர் தமிழகத்தில் அப்பு என்பவரிடம் ₹200 கோடி ஹவாலா பணத்தை கொண்டு வருவது குறித்து பேசியது தெரியவந்தது. தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிக்கு இப்பணத்தை வழங்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

News April 10, 2024

BREAKING: இடியுடன் மழை பெய்யும் மக்களே

image

கடந்த 2 வாரமாக வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், பிற்பகல் நேரத்தில் வெளியே வரமுடியாததால் மழை பெய்யாதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு, மக்களின் மனதை குளிர வைத்துள்ளது. இதனால், வெப்பம் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!