India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில், தனது பெயரில் ₹27 கோடி அசையும் சொத்துகள், ₹26 கோடி அசையா சொத்துகள் உள்ளதாகவும், சரத்குமார் பெயரில் ₹8 கோடி அசையும் சொத்துகள், ₹21 கோடி அசையா சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வருமான வரி பாக்கி போன்றவை ₹6 கோடி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில், இடுப்பு உயர No Ball-களை துல்லியமாக கணிக்க பிசிசிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களின் முழு உயரம் மற்றும் இடுப்பு உயரத்தை கணக்கிட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்த விவரங்களை டிவி ஆபரேட்டர்களால் பயன்படுத்தப்படும் ‘Hawk-Eye’ தொழில்நுட்பத்தில் இணைத்துவிட்டால், இடுப்பு உயர No Ball-களை 3ஆவது நடுவரால் துல்லியமாக கணிக்க முடியும்.
கருங்காலி மாலை அணிவதில் எந்த நம்பிக்கையும் இல்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இனிமேல் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், “எனது நண்பர் வாங்கி கொடுத்ததால் இந்த மாலையை அணிந்துள்ளேன். மற்றபடி இதில் எந்த நம்பிக்கையும் இல்லை. இதை அணிந்து கொண்டால் சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டி குறையும் எனக் கூறி நண்பர் தான் இதை அணிவித்தார். மறுக்க முடியாததால் அதை போட்டுள்ளேன்” என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் செய்தியை உதயநிதி வெளியிட்டுள்ளார். தி.மலையில் தேர்தல் பரப்புரையின்போது, மகளிர் உரிமைத் திட்டம் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் உள்ள சின்ன சின்ன குறைப்பாடுகள் களையப்படும். தேர்தல் முடிந்ததும் இதுவரை 1000 ரூபாய் வாங்காத பெண்களுக்கும் வழங்கப்படும் என்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சியினரை விமர்சிக்க புதுப்புது யுக்திகளை கையாளுகிறார். கடந்த ஒரு வாரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை பரப்புக்கு பயன்படுத்திய அவர், தற்போது பிரதமர் மோடி உடன் இபிஎஸ் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
குஜராத் – சென்னை இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு நடைபெற உள்ளது. புதிய மற்றும் இளம் கேப்டன்களை கொண்ட 2 பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்றதால், புள்ளிப் பட்டியலில் யார் முதலிடத்தை பிடிக்க போவது என்பதை இன்றைய போட்டி தீர்மானிக்கும். இதற்காக சென்னை மற்றும் குஜராத் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடிக்கு பயந்து பிரதமர் மோடியை எதிர்க்க வட மாநிலத் தலைவர்கள் தயங்குகிறார்கள் என்று நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா விமர்சித்துள்ளார். தமிழ் மொழி, தமிழ்நாட்டை காப்பாற்றுவது மட்டுமின்றி இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் படித்த பவன் தவுலூரி என்பவர் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பிரிவு தலைவராக இருந்த பனோல் பனய் பதவி விலகி அமேசானில் சேர்ந்ததை தொடர்ந்து, தவுலூரி நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளாவை தொடர்ந்து, இவர் அமெரிக்காவின் உயர்தொழில்நுட்ப நிறுவன தலைவராகியுள்ளார்.
தமிழகத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வருவதால், குழந்தைகளுக்கு காய்ச்சல், அம்மை, போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், https://ihip.mohfw.gov.in/cbs/#!/ என்ற இணையதளத்தில் பெயர், இடம், தொலைபேசி எண், தொற்று விவரங்களை பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெயில் காலம் என்பதால் எந்த தொற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
‘குணா’ குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்.22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
Sorry, no posts matched your criteria.