India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில நாள்களாக சிறுக ஏற்றம் கொண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50,000 என வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை, உலகளாவிய பணவீக்கம், முதலீடு பார்வை, பெடரல் வங்கி வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதாக என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இனிவரும் நாள்களில் தங்கம் விலை மட்டுமில்லாது வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொடுமாம்.
*845 – பாரிஸ் நகரம் வைக்கிங்குகளால் சூறையாடப்பட்டது. *1857 – பிரிட்டன் ஆட்சிக்கெதிராக மங்கள் பாண்டே கிளர்ச்சியை ஆரம்பித்தார். *1849 – பஞ்சாபை பிரிட்டன் கைப்பற்றியது. *1973 – அமெரிக்கப் படைகள் வியட்நாமை விட்டு வெளியேறின. *2007 – நோர்வே நாட்டின் ஏபல் பரிசை (கணித நோபல் என்பர்) சீனிவாச வரதன் பெற்றார். * 1965 – கவிஞர் தமிழ்ஒளி மறைந்த நாள். 2008 – புவி மணி (Earth Hour) அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
சர்வதேச அளவிலான பேட்மிண்டன் தரவரிசையில், சாத்விக்-சிராக் ஜோடி தொடர்ந்து 10 வாரங்களாக நம்பர்-1 இடத்தை தக்கவைத்து சாதனை படைத்துள்ளது. மலேசிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட நான்கு சர்வதேச தொடரின் பைனலுக்கு முன்னேறிய இந்த ஜோடி 1,02,303 புள்ளியுடன் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு முன் சர்வதேச தரவரிசையில் 9 வாரம் ‘நம்பர்-1’ இடத்தில் இருந்த சாய்னா நேவாலின் சாதனையை சாத்விக்-சிராக் ஜோடி முறியடித்துள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த தினசரி ஊதியத்தை உயர்த்தி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் (3%-10%) ஊதிய உயர்வு வேறுபடுகிறது. அதாவது, அரியானாவில் ரூ.374 ஆகவும், தமிழ்நாட்டில் ₹319ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஊதிய உயர்வில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டு காலம் சிபிஎம் சு.வெங்கடசேன் சும்மாவே இருந்ததால், மதுரை மக்கள் அவரை சு.வெ என அழைப்பதாக அதிமுக வேட்பாளர் மரு.சரவணன் கிண்டலடித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், “சமூக வலைதளங்களில் மட்டுமே ஆக்ட்டிவாக இருக்கும் சு.வெ மக்களை நேரில் சந்திப்பதில்லை. விளம்பர பிரியரான அவருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக, மக்களுடன் மக்களாக நின்று, வாழ்வுரிமைக்காகப் போராடும் எனக்கு வாக்களிக்கலாம்” என்றார்.
▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: களவியல்
▶ அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல்.
▶ குறள் எண்: 1122
▶குறள்:
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
▶ பொருள்: அறிவியல்படி, உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; இருக்கவும் முடியாது. அத்தகையது உறவு தான் எனக்கும் என் காதலிக்கும் உள்ள உறவு.
கேப்டன் மில்லர் படத்தின் பின்னணி இசையை கேட்டுவிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை பாராட்டியதை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் பார்த்து வளர்ந்த இசையமைப்பாளர்களோடு இப்போது சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதே நேரத்தில் என்னைத் தேடி வரும், எனக்குப் பிடித்த படங்களுக்கும் இசையமைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆசிய கூடைப்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. சிங்கப்பூரில் ஆசிய கூடைப்பந்து (3×3) தொடர் நடக்கிறது. அதன் தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் ஸ்ரீகலா ராணி, அனிஷா, காவ்யா, புஷ்பா ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 20-13 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து, பிரதான சுற்றுக்கு முன்னேறியது.
நீதிமன்றங்களுக்கு அழுத்தம் தரும் வகையில், ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் பொய் பிரசாரம் செய்துவருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 600 வழக்குரைஞர்கள் கூட்டாக எழுதிய அந்த கடிதத்தில், “மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நீதிமன்றங்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைப்பவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.