India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அருகே பூந்தமல்லியில் சித்த மருத்துவர் ஊசி போட்ட அடுத்த 10 நிமிடத்தில் முதியவர் ராஜேந்திரன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சித்த மருத்துவத்தில் ஊசிபோடும் முறை கிடையாது. பின் எப்படி ஊசி செலுத்தப்பட்டது என சித்த மருத்துவரான பெருமாளிடம் விசாரித்து வருகின்றனர்.
மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐநாவை சேர்ந்த தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல், இதுவொரு துரதிஷ்டவசமான மற்றும் திட்டமிடப்படாத நிகழ்வு. தவறாக அடையாளம் காணப்பட்டதால், தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஐநா பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் Njan Prakashan என்ற படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து டாடா, பீஸ்ட் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில் அபர்ணா தாஸுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் தீயாய் பரவி வருகிறது. இவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த தீபக் பரம்போலை வரும் 24ம் தேதி கரம்பிடிக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் பதவியேற்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுவந்த எல்.முருகனின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இதனிடையே நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராகவும் அவர் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீரை பீய்ச்ச வேண்டும். தண்ணீர் பீய்ச்சுபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடருவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வழங்காததால் கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சீட் இல்லை என்பதால் வருத்தத்தில் இருந்தோம். சட்டப்பேரவைத் தேர்தலின் போது முக்கியத்துவம் அளிப்பதாக அதிமுக உறுதியளித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
150 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் உணவுக் கட்டுப்பாடுகள், இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தனியுரிமை பாதுகாப்பு சட்டம், திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இடஒதுக்கீடு சட்டம் திருத்தப்பட்டது. பண மோசடி சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
மோடி 2014இல் பிரதமரான பிறகு ஊழல் வழக்குகளில் சிக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். இதில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகளை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, விசாரணை அமைப்புகளை பாஜக அரசு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் ஏப்.18, 19ஆம் தேதிகளில் செய்தித்தாள், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும், வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அரசியல் கட்சிகள் விளம்பரம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். 2ஆவது முறையாக வயநாட்டில் போட்டியிடும் அவர், தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த தேர்தலில் இங்கு போட்டியிட்ட அவர், 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.