India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 6ஆவது சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் விதித் குஜராத்தி அபார வெற்றி பெற்றுள்ளார். பிரெஞ்சு வீரர் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுக்கு எதிரான இப்போட்டியில், விதித் தொடக்கம் முதலே தனது உத்திகளை சரியாக செயல்படுத்தி வந்தார். இதனால், 40ஆவது நகர்த்தலில், பிரெஞ்சு வீரர் தோல்வியை தழுவினார். அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுக்கு எதிரான மற்றொரு போட்டியில், தமிழக வீரர் குகேஷ் டிரா செய்துள்ளார்.
சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நடிகர் ராம் சரண் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். ஏப்.13ஆம் தேதி நடைபெறும் இவ்விழாவில், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியான ‘RRR’ படம் இவருக்கு பான் இந்தியா அந்தஸ்த்தை வழங்கிய நிலையில், அவரது கலை சேவையை பாராட்டி அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீத்தாராம் இந்த பட்டத்தை வழங்குகிறார்.
வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைதர ஆணையத்திற்கு வழங்கிய காலக்கெடு முடிந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இடஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு; போராடித்தான் வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாமக தயார் என எச்சரித்துள்ளார்.
தேர்தலில் முக்கியப் பிரச்னைகளாக வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் இருப்பதாக CSDS-LokNiti நடத்திய தேர்தலுக்கு முந்தைய சர்வேயில் தெரியவந்துள்ளது. அதன் அறிக்கையில், விலைவாசி உயர்வைப் பொருத்தவரை 71% பேர் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். வேலை வாய்ப்பின்மைக்கு மாநில அரசுகளே காரணம் என 17% பேரும், மத்திய அரசுதான் காரணம் என 27% பேரும் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
உருவ கேலிக்கு ஆளானதாக நடிகை அபிராமி வேதனை தெரிவித்துள்ளார். விருமாண்டி, வானவில், சமுத்திரம், தோஸ்து உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள அவர், தாம் உருவ கேலிக்கு ஆளான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “உயரமாக இருப்பதாக நான் உருவ கேலி செய்யப்பட்டேன். இதனால் பட வாய்ப்புகளும் பறி போனது. எனது தாடை மிக நீளமாக இருப்பதாகக் கூறி, இழுத்து பார்த்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
புத்த மதத்துக்கு இந்துக்கள் மாற முன் அனுமதி பெறுவது அவசியம் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. தலித்துகள் புத்த மதத்துக்கு மாறும் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது குறித்து கவனத்துக்கு வந்ததையடுத்து, குஜராத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், புத்தம், சீக்கியம், ஜைனம் ஆகியவை தனி மதங்கள், அதற்கு மாற மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. கள்ளுக்கடைகளை திறப்போம் என பாஜக உறுதியளித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஆதரவு அளிப்பதாக கராத்தே செல்வினின் மனைவி வயோலா அறிவித்துள்ளார். ராக்கெட் ராஜா – ஹரி நாடார் இடையே மோதல் வெடித்ததால் நாடார் சமூக வாக்கு பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இந்தியாவின் ஏவுகணை நாயகன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு இயற்பியல் பாடம் கற்பித்த பேராசிரியரும், அருட்தந்தையுமான லடிஸ்லாஸ் சின்னத்துரை (101) இன்று காலமானார். ஆசிரியப் பணி, இறைத்தொண்டிலும் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். கலாம் தமிழ்நாடு வரும்போது எல்லாம், அவரை சந்தித்து ஆசிபெற்று, நீண்ட நேரம் உரையாடுவார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியாவிடம், ரூ.4.3 கோடி மோசடி செய்த அவர்களது ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியாவை போலீசார் கைது செய்துள்ளனர். பாலிமர் என்ற நிறுவனத்தை மூவரும் அமைத்த நிலையில், சகோதரர்களுக்கு தெரியாமல் வைபவ் தனது லாப பங்கை 20%இல் இருந்து 33%ஆக உயர்த்தியதோடு, வேறொரு நிறுவனத்தையும் நிறுவியிருக்கிறார். இந்த உண்மை ஹர்திக் பாண்டியாவுக்கு தெரியவர, அவர் போலீசில் புகார் அளித்தார்.
2024 ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வுக்கான (CHSL) விண்ணப்பத்தை, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதில், அஞ்சல் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளார்க் உட்பட 3,712 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு, 12ஆவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் மே 7ஆம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.