India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மலையாள நடிகரான நிவின் பாலி, ‘நேரம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்த அவர், தற்போது ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான இப்படம் நேற்று வெளியான நிலையில், வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நிவின் பாலியின் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.
திமுகவின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல்லில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், “திமுகவின் 3 ஆண்டு ஆட்சியில், செங்கல், மணல், கம்பி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் வீடு கட்டுவது கனவாகி விட்டது. அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில், கட்டுமான பொருட்களை சேர்க்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.
மோடி ஊழலைப் பற்றி பேசினால், ‘யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வை’ அப்படித்தான் மக்கள் பேசுவார்களென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் செய்த எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தால் அதன் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார் ” என்றார்.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது சிராஜ் நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகிறார். இதுவரை RCB அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதிலும் மூன்று போட்டிகளில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ரன்களையும் வாரி வழங்கி வருகிறார். விரைவில் அவர் ஃபார்முக்கு திரும்பவில்லை என்றால் உலகக்கோப்பையில் இடம் பெறுவது கடினமாக இருக்கும்.
பிரசாரக் கூட்டத்தில் மாமிச உணவு தொடர்பான கருத்துகளை பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஷ்ராவன மாதத்தில் மாமிசம் சாப்பிடுவது போன்ற ஃபோட்டோக்களை பதிவிட்டு மனதை புண்படுத்துவதாக பிரதமர் பேசியிருந்தார். சுமார் 75% மாமிச விரும்பிகள் இருக்கும் இந்தியாவில் யாரை கவர பிரதமர் இவ்வாறு பேசுகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராகுல் அவர்களே வருக..புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கோவை செட்டிபாளையத்தில் ராகுல், ஸ்டாலின் கூட்டாக பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், “எப்போதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா, ராகுல் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அன்பு உண்டு. மக்களவைத் தேர்தலில் கதாநாயகன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான்” என்றார்.
தனுஷ் தன் மகன் என கூறி வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த ஆறு ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வந்த கதிரேசனுக்கு கடந்த ஓராண்டாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக பீதியில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதாக தெரிவித்த அவர், தேர்தல் முடிவில் ஆட்சியை பிடிப்போம் என்றார். இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை பின் தொடர்வது, கெஜ்ரிவாலை நள்ளிரவில் கைது செய்தது, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியது என பாஜகவின் செயல்பாடுகள் விரக்தியின் வெளிப்பாடு என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது மதுரையில் பிரசாரம் செய்து வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் நடிகர் சந்தான பாரதியின் ஃபோட்டோ இடம் பெற்றுள்ளது. இருவரும் உருவ அமைப்பில் ஒரே மாதிரியாக இருப்பதால் பாஜகவினர் குழப்பமடைந்து விட்டனர். ஆனால், ஒருவர் கூட இதனை கண்டுபிடிக்காமல் போஸ்டராக ஒட்டும் வரை வந்திருக்கிறதே என்று எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் 5ஆம் தேதி கணக்கீட்டின்படி, அந்நியச் செலாவணி 2.98 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 648.562 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் இருப்பை பொருத்தமட்டில், 2.39 பில்லியன் டாலர் உயர்ந்து 54.55 பில்லியன் டாலராக உள்ளது. Special Drawing Rights 18.17 மில்லியன் டாலரில் இருந்து 24 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.