News May 1, 2024
பிஎஸ்என்எல் 4ஜி சந்தாதாரர் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்வு

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 20 ஆயிரம் 4ஜி டவர்களை அமைத்து, 4ஜி சேவைகளை முழு வீச்சில் வழங்க பிஎஸ்என்எல் ஆயத்தமாகி வருகிறது. மேலும் 3,500 டவர்களை அமைத்து பஞ்சாப், ஹரியானா ஹிமாச்சல் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் ஆரம்பகட்டமாக 4ஜி சேவை அளித்து வருகிறது. அங்கு அந்த சேவையை 8 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<
News December 6, 2025
திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
News December 6, 2025
எடையை குறைக்க உதவும் ‘கொத்தமல்லி’

சமையலில் மணம், சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கொத்தமல்லி விதையில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது. *கொத்தமல்லி இலையில் உள்ள குவர்செடின் எனும் வேதிப்பொருள் பசியை கட்டுப்படுத்தி, கலோரிகளை எரிக்கிறது. *இதை தினமும் உணவில் சேர்த்தால், உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது *இதயம், தோல், மூளைக்கும் நல்லது.


