India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜி.வி. தனது காதலியான பாடகி சைந்தவியை 2013இல் திருமணம் செய்துக் கொண்டார். 11 ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த நிலையில், மன அமைதியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பரஸ்பர மரியாதையை மனதில் வைத்து இருவரும் பிரிவதாகவும், இந்த கடினமான நேரத்தில் அனைவரின் ஒத்தழைப்பு தேவை எனவும் ஜி.வி. தெரிவித்துள்ளார்.
➤ 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு
➤ புதிய ஆட்சியில் சிறையில் இருந்து வெளிவருவேன் – கெஜ்ரிவால்
➤ பாஜக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை – ராகுல்
➤பாகிஸ்தானுக்கு வளையல் அனுப்புவோம் – மோடி
➤ நடிகர் சங்கத்திற்கு ₹1 கோடி வழங்கினார் தனுஷ்
➤ பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட குஜராத்
லக்னோ அணியில் தற்போதைக்கு கேப்டன்சியில் மாற்றம் இல்லை என அந்த அணியின் துணை பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் தெரிவித்துள்ளார். லக்னோ உரிமையாளரும், கே.எல்.ராகுலும் மைதானத்தில் பேசியதில் எவ்வித தவறும் இல்லை என்ற அவர், அதை ஆரோக்கியமான விவாதமாகவே பார்க்க வேண்டும் என்றார். ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, லக்னோ அணி உரிமையாளர், கேப்டன் கே.எல்.ராகுலை கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் பெங்களூர் அணிக்கு கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த முறை பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், இந்திய வீரர் ஒருவரை அந்த அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்ற அவர், அது கோலியாக இருந்தால் அணிக்கு நல்லது என்றார். சென்னை அணியில் தோனி தாக்கத்தை ஏற்படுத்துவதை போல, கோலி பெங்களூர் அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனவும் கூறினார்.
ஆள் கடத்தல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ரேவண்ணா இன்று ஜாமினில் விடுதலை ஆக உள்ளார். பெண்ணை கடத்தியதாக கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், ஜாமின் உத்தரவை சிறையில் சமர்பிக்க காலதாமதம் ஆனதால், அவரால் சிறையில் இருந்து நேற்று வெளிவர முடியவில்லை.
ரோஹித் 50 வயது வரை கிரிக்கெட் விளையாட வேண்டும் என முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 37 வயதை தாண்டிய வீரர்களை இந்தியாவுக்காக தேர்வு செய்யக்கூடாது என்ற கோட்பாட்டை பிசிசிஐ மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், திறமைக்கு வயது தடையாக இருக்க கூடாது என்றார். வயதை அடிப்படையாக வைத்து வீரர்களை தேர்ந்தெடுக்கும் முறை அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சீபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
மே – 14 | வைகாசி- 1
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:30AM – 08:30AM, 4:30PM – 5:30PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM, 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM – 01:30 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால்
▶ திதி : சூன்ய
உணவை பொறுமையாக, நிதானமாக வாயில் அசைபோட்டு சாப்பிட வேண்டும். ஏனென்றால், வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு . விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும். இதனால் குடல் ஹார்மோன்கள் சீர்குலைத்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்பட்டு, சர்க்கரை நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.
சூர்யகுமார் யாதவை கொல்கத்தா அணியிலிருந்து தவற விட்டதற்கு வருந்துவதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கொல்கத்தா கேப்டனாக 7 வருடம் இருந்த போது, சூர்யகுமார் யாதவை சரியாக பயன்படுத்தவில்லையே என்று வருத்துவதாக கூறிய அவர், அதற்கு மற்ற பேட்ஸ்மேன்களின் வருகை முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்தார். வீரர்களின் திறமையை கண்டறிந்து, உலகிற்கு காண்பிப்பதே ஒரு கேப்டனின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.