news

News May 15, 2024

சிங்கப்பூர் அமைச்சரவையில் இந்திய வம்சாவளிகள்

image

சிங்கப்பூரில் தற்போது துணை பிரதமராக பதவி வகிக்கும் லாரன்ஸ் வோங் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அவரது புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த முரளி பிள்ளை சட்டம் & போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர்களாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவியன் பாலகிருஷ்ணன், சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோரும் அமைச்சரவையில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

CUET தேர்வுகள் தொடங்கியது

image

மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான CUET நுழைவுத் தோ்வு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 380 நகரங்களிலும், வெளிநாடுகளில் 26 இடங்களிலும் நடைபெறும் இத்தேர்வுக்கு, 13 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுகள் ஒரே நாளில் காலை 10-11, மதியம் 12.15-1, 3-3.45 என 3 பகுதிகளாக கணினி அடிப்படையில் மற்றும் நேரடி எழுத்துத் தோ்வு முறைகளில் நடைபெறுகிறது.

News May 15, 2024

10 கிலோ அரிசி இலவசம்: கார்கே

image

I.N.D.I.A கூட்டணி ஆட்சியமைத்தால் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். லக்னோ பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த வாக்குறுதியை வழங்கினார். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி வாக்காளர்களை ஈர்த்துவரும் நிலையில், இலவச அரிசி வாக்குறுதியையும் காங்கிரஸ் அளித்துள்ளது.

News May 15, 2024

சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்க இவ்வளவு தாமதமா?

image

மோடியின் அரசியல் பயணம் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை அடிப்படையாக கொண்டது என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார். ஊடுருவல்காரர்கள் என முஸ்லிம்களை கூறவில்லை என பிரதமர் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கத்தைக் கொடுக்க இவ்வளவு தாமதமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் மோடியும், பாஜகவும் எண்ணற்ற பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

‘G.O.A.T’ படம் ‘Zee’க்கு கைமாறியதன் பின்னணி

image

‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ₹55 கோடிக்கு வாங்க சன் டிவி பல்வேறு கெடுபிடிகளை விதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கக் கூடாது எனவும், 2 மணி நேர பேட்டிக்கு விஜய் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கூறியதால், படத்தை ஜீ நிறுவனத்திற்கு படக்குழு கைமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

News May 15, 2024

கிணற்றில் இருந்தது மலம் அல்ல, தேனடை

image

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக, அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். இதற்காக, கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே இறங்கி சோதனை மேற்கொண்டனர். இதில், கிணற்றிலிருந்தது மனித மலம் அல்ல, தேனடை என்பது தெரியவந்துள்ளது.

News May 15, 2024

நியூஸ் க்ளிக் நிறுவனர் விடுதலை

image

நியூஸ் க்ளிக் நிறுவனரும், தலைமை செய்தி ஆசிரியருமான பிரபீர் புரகாயஸ்தாவை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீன நிறுவனத்திடம் இருந்து சட்ட விரோத நிதி பெற்ற வழக்கில், கடந்த ஆண்டு உபா சட்டத்தின் கீழ், அவர் கைது செய்யப்பட்டார். அந்நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைமை அதிகாரி அமித் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது கைது சட்ட விரோதமானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News May 15, 2024

தோனிக்கு மிகவும் பிடித்த இடம் எது தெரியுமா?

image

தனக்கு மிகவும் பிடித்த இடம் அமெரிக்காவில் உள்ள ‘நியூ ஜெர்ஸி’ நகரம் தான் என CSK வீரர் தோனி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், உங்களுக்கு எந்த இடம் மிகவும் பிடிக்கும்? என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நியூ ஜெர்ஸி என பதிலளித்த அவர், தனது நண்பர்கள் நிறைய பேர் அங்கு இருப்பதாகவும், அவர்களுடன் கோல்ஃப் விளையாடுவதும், சாப்பிடுவதுமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

News May 15, 2024

‘விடுதலை 2’ தாமதம்: வெற்றிமாறன் விளக்கம்

image

‘விடுதலை 2’ படத்திற்கு இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு தேவைப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் சேதுபதி தொடர்புடைய முக்கியமான காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளது என்றும், ஆனால், தேதிகள் அமையாததால் படப்பிடிப்பு தள்ளிப் போவதாகவும் கூறியுள்ளார். மேலும், விடுதலை 2 வெளியான பிறகே, வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News May 15, 2024

12 மணி நேர போராட்டத்திற்கு பின் 14 பேரும் மீட்பு

image

ராஜஸ்தானில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கத்தில் நேற்றிரவு லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் சிக்கினர். தொடர்ந்து மீட்புப் பணியில் போலீசாரும், பேரிடர் மீட்பு படையினரும் 12 மணி நேரத்திற்கும் மேல் போராடியதில், 14 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!