news

News April 27, 2024

ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொன்றில் சுண்ணாம்பு

image

வடகிழக்கு பருவமழையின்போது தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசிடம் ₹38,000 கோடியை தமிழக அரசு நிவாரணமாக கேட்டது. நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது. இந்நிலையில் தமிழகத்துக்கு ₹276 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. அதேவேளை கர்நாடகத்துக்கு வறட்சிக்காக ₹3,454 கோடி ஒதுக்கியுள்ளது. இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள், ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொன்றில் சுண்ணாம்பா என கேட்கின்றனர்.

News April 27, 2024

கோலியின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது

image

ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலியை தேர்வு செய்யக்கூடாதென சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் சர்வதேச தரத்திற்கு நிகரான திறமைகளை பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

News April 27, 2024

“கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது”

image

கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது; பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதியளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை புகார் கூறி இருந்த நிலையில், கோவையை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

News April 27, 2024

குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்

image

குடிநீர் பிரச்னை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ₹150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

News April 27, 2024

தமிழகத்தில் போட்டியின்றி தேர்வான மூன்று பேர்!

image

மக்களவைத் தேர்தலில் மூவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வரலாறு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. அதன் விவரம் இதோ:- 1952 – ராமலிங்க செட்டியார் (கோவை) 1957 – கணபதி நாடார் (திருச்செந்தூர்) 1962 – கிருஷ்ணமாச்சாரி (திருச்செந்தூர்). இவர்கள் 3 பேரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் கிருஷ்ணமாச்சாரிக்கு அப்போதைய பிரதமர் நேரு, மத்திய அமைச்சர் பதவி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News April 27, 2024

போதைப் பொருள் விவகாரம்: தமிழக அரசு அலட்சியம்

image

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருள்களால் தமிழ்சமுதாயம் அழிவுக்கு செல்வதாகவும், ஆனால் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் அரசு அலட்சியம் காட்டுகிறது என்றும் விமர்சித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குடிமராமத்து திட்டத்தை அரசு நிறுத்தி விட்டதாகவும் அவர் கூறினார்.

News April 27, 2024

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

image

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்படும் நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு, அன்றாடம் முறையான குடிநீர் வழங்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது.

News April 27, 2024

தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளார் மோடி

image

பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மோடி அரசு வஞ்சனை செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத புயல், வெள்ளத்தால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை மத்திய அரசிடம் எடுத்துக்கூறியும் பலனில்லை என வேதனை தெரிவித்தார். மேலும், குஜராத்துக்கு ஆயிரம் கோடி நிதி கொடுத்த மோடி, தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளதாக அவர் சாடினார்.

News April 27, 2024

சர்ச்சையில் சிக்கியதால், திமுகவில் இருந்து நீக்கம்

image

ஆளும் திமுகவை சேர்ந்த போஸ், தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார். நேற்று அவரின் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்விவகாரத்தை டிடிவி உள்ளிட்டோர் அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள நிலையில், போஸ் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.

News April 27, 2024

சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்த டாடா

image

ஆப்பிள் நிறுவன செல்ஃபோன்களை அசெம்பிள் செய்ய அதீத திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் டாடா நிறுவன கிளையில் வைத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, அசெம்பிளிங் இயந்திரங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை டாடா நிறுவனம் தவிர்த்துள்ளது.

error: Content is protected !!