News May 16, 2024

செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு

image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கதுறை தரப்பில் வாதாடும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ED கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News November 16, 2025

பிஹார் தேர்தல்: மாரடைப்பால் உயிரிழந்த வேட்பாளர்

image

பிஹார் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ஜன்சுராஜ் வேட்பாளர் சந்திர சேகர் சிங் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தராரி தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு, தேர்தல் பிரசாரத்தின் போது மாரடைப்பு வந்தது. சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட நிலையில், 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2,271 வாக்குகள் மட்டுமே பெற்று, 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

News November 16, 2025

அடிப்படை புரிதலின்றி பேசும் EPS: TRP ராஜா

image

தமிழகத்திற்கு வர இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவதாக <<18295289>>EPS குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், எவ்வித அடிப்படை புரிதலுமின்றி ஊர் வம்பு பேசும் பெருசுகள் போல EPS குற்றம்சாட்டி வருவதாக அமைச்சர் TRP ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல எனவும் கூறியுள்ளார்.

News November 16, 2025

பொங்கல் விடுமுறை.. வந்தது HAPPY NEWS

image

பொங்கல் விடுமுறையையொட்டி தமிழகத்தில் 500+ சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலன் கருதி வழக்கமான ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்றும், மதுரை, திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெட்டிகள் அதிகரிப்பால் Waiting List பற்றி கவலைப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!