news

News April 30, 2024

விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்தவர் மாயம்

image

நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்த மூதாட்டி மாயமானதாக அவரது உறவினர் X தளத்தில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது சென்னை வாக்குச் சாவடியில் வாக்களித்த விஜய் சேதுபதியுடன், மூதாட்டி டாக்டர் கெளசல்யா எடுத்த செல்ஃபி வைரலானது. இந்நிலையில், அவரையும், அவரது மகனையும் ஏப்.22 முதல் காணவில்லை எனவும், போலீசார் அவர்களைத் தேடி வருவதாகவும் அவரது உறவினர் கூறியுள்ளார்.

News April 30, 2024

ஐபிஎல்: மும்பை அணி பேட்டிங்

image

ஐபிஎல் தொடரின் 48ஆவது லீக் போட்டியில், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. லக்னோவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. தொடர் தோல்வியைக் கண்டு வரும் மும்பை அணி, பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார்? என கமெண்டில் கூறலாம்.

News April 30, 2024

வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்றும், தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மெயின் பில்டர் பழுதாகிவிடும் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News April 30, 2024

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது

image

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதெனக் கர்நாடகா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 95ஆவது கூட்டத்தில், பிப்.1 முதல் தமிழகத்திற்கு 7.3 டி.எம்.சிக்குப் பதிலாக 2.3 டி.எம்.சி நீர் மட்டுமே காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் உத்தரவுப்படி, கர்நாடகம் நீர் திறக்கவில்லை என்று தமிழகம் புகார் தெரிவித்தது.

News April 30, 2024

டாஸ்மாக் நிர்வாக உத்தரவுக்கு அன்புமணி கண்டனம்

image

பீர் உற்பத்தியை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் கொளுத்துவதால் கூலிங் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், மதுக் கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் தவிர்க்க உற்பத்தியை அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நடப்பது அரசாங்கமா? அல்லது மது வணிக நிறுவனமா எனக் கேள்வி எழுப்பினார்.

News April 30, 2024

அதிக ஐசிசி தொடர்களில் விளையாடிய இந்தியர்கள்

image

இந்தியாவுக்காக அதிகமுறை ஐசிசி தொடர்களில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் சிங் முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 14 தொடர்களில் விளையாடியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, ரோஹித் ஷர்மா 13, கோலி 12, சச்சின், ஹர்பஜன் தலா 11 தொடர்களில் விளையாடியுள்ளனர். நடைபெறும் டி20 WC தொடர் ரோஹித்துக்கு 14ஆவது தொடராகும்.

News April 30, 2024

பிரதமரின் வெறுப்புப் பேச்சால் பாஜக தோற்கும்

image

வெறுப்புப் பேச்சுகளைப் பிரதமர் மோடி பேசப் பேச பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் இந்திய மக்களுக்கு வாழ்வா? சாவா? என்று உள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவின் எதிர்காலமே மக்களவைத் தேர்தல் முடிவைப் பொறுத்து இருக்கிறது என்றார். மேலும், INDIA கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News April 30, 2024

இந்திய மகளிர் அணிக்கு 120 ரன்கள் இலக்கு

image

2ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற 120 ரன்களை வங்கதேச மகளிர் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. சில்ஹெட்டில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஏற்கெனவே முதல் போட்டியில் வென்ற இந்திய மகளிர் அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

கோவிஷீல்டு செலுத்தியோருக்கு இந்த அறிகுறி உள்ளதா?

image

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய சிலருக்கு த்ரோம்போசைட்டோபீனியா நோய் அறிகுறி ஏற்படலாம் என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரத்தம் உறைவதோடு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால்களில் வீக்கம், மயக்கம் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News April 30, 2024

கோரைப் பாயில் தூங்கினால் இத்தனை நன்மைகளா?

image

கோரைப் பாயில் தூங்குவதால், பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன? 1) பாய்க்கு உடல் சூட்டை உள்வாங்கும் தன்மை உள்ளதால், ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும் 2) உடல் சோர்வாகவும், மந்தமாகவும் உணர்பவர்கள் பாயில் படுத்து எழுந்தால் சோர்வு நீங்குவதாகச் சொல்லப்படுகிறது 3) கர்ப்பிணிகள் பாயில் உறங்கினால், முதுகு வலி, இடுப்பு வலி வராது 4) குழந்தையைப் பாயில் படுக்க வைத்தால், முதுகெலும்பைச் சீர்ப்படுத்தும்.

error: Content is protected !!