India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு குழந்தைகள் வீட்டில் உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் அவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்று விடுவர். ஆதலால், இந்த ஒரு மாதத்தில் பெற்றோர், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். தொலைக்காட்சிகள், செல்ஃபோன்களில் நேரத்தை வீணடிக்காமல், தங்களது வாரிசுகளுடன் பொழுது போக்க வேண்டும். இதனால் பெற்றோர்- குழந்தைகள் இடையேயான அன்பு மேலும் அதிகரிக்கும்.
மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில், தேர்தலில் பெரும்பான்மை பெரும் அரசியல் கட்சிகளே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அமைக்கின்றன. இதுபோல இந்தியாவில் 7 தேசிய கட்சிகளும், 57 பிராந்திய கட்சிகளும், 2,764 அங்கீகாரமில்லா கட்சிகளும் உள்ளதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. இந்த கட்சிகள்தான், தேர்தலில் கூட்டணி அமைத்தோ, தனித்துப் போட்டியிட்டோ வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
தமிழகம் முழுவதும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. போலி நபர்கள் POLICE, PRESS போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில், மே 2 முதல் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. விதிகளை மீறுவோருக்கு ₹500-₹1000 வரை அபராதம் விதிக்கப்படும் என போலீசார் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நிதானமாக ஆடிய ருதுராஜ் அரை சதம் அடித்தார். இதையடுத்து, நடப்பு தொடரில் 509 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். இதுவரை, ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்திருந்த RCB வீரர் விராட் கோலி 500 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், சாய் சுதர்சன் (418) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
சிறியவர் முதல் பெரியவர் வரை நாள்தோறும் சந்திக்கும் பிரச்னை மலச்சிக்கலாகும். அன்றாடம் நாம் கடைபிடிக்கும் உணவு முறையை மாற்றினால், இதற்கு தீர்வு காண முடியும். தண்ணீர் அதிகம் அருந்துவதாலும், இரவு நேரத்தில் பழங்களை அதிகம் உட்கொள்வதாலும் தீர்வு காணலாம். எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து முளைகட்டிய தானியங்கள், சிறுதானிய உணவுகளை உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
விருதுநகர் அருகே கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசை சாடியுள்ளார் இபிஎஸ். உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் வெடிபொருட்களை நகர்த்தியதே விபத்திற்கு காரணம் எனக் கூறினார். மேலும், வெடி விபத்தைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததே தொடர்ந்து விபத்துகள் நடக்க காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருப்பதாகவும், அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்க உள்ளார்.
ஹயபுசா மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் விதமாக வெள்ளிவிழா எடிஷனை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கருப்பு & ஆரஞ்சு நிறத்தில் அறிமுகமாகியுள்ள இந்த நான்காம் தலைமுறை மாடலில் முப்பரிமாண லோகோ இடம்பெற்றுள்ளது. லிக்விட் கூல்டு, 1,340 சி.சி. திறனை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர், பியூயல் இன்ஜெக்ஷன் டி.ஓ.ஹெச்.சி என்ஜினைக் கொண்ட இதன் விலை ரூ.17.70 லட்சமாகும்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக ருதுராஜ் 62, ரஹானே 29, ரிஸ்வி 21 ரன்கள் எடுத்தனர். கடைசியில் களமிறங்கிய தோனி 14 ரன்கள் எடுத்தார். இதையடுத்து PBKS அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PBKS தரப்பில் ஹர்ப்ரீத், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாள்தோறும் அதிகரிப்பதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, தி.மலை மாவட்டங்களில் நாளை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.