news

News May 15, 2024

அய்யாக்கண்ணு வாரணாசியில் போட்டியிட முடியாது

image

மோடி போட்டியிடும் வாரணாசியில் தன்னை போட்டியிட விடாமல் தடுத்ததாக அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். “தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? விளம்பரம் செய்து கொள்வதற்காக தேர்தலை பயன்படுத்தாதீர்கள். சமூக ஆர்வலர் என்றால் தமிழ்நாட்டில் சென்று போட்டியிடுங்கள்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

News May 15, 2024

CRED App-ஐ வறுத்தெடுத்த நெட்டிசன்

image

கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை செலுத்த உதவும் ‘CRED’ என்ற கேட்வே App-ஐ நெட்டிசன் ஒருவர் வறுத்தெடுத்துள்ளார். கிரெடிட் கார்டு கட்டணத்திற்கு ஏற்ப நிறைய கேஷ்பேக்குகள் கிடைக்கும் என நம்பி, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ₹87,000 கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தியுள்ளார். அதற்கு கேஷ்பேக்காக வெறும் ₹1 வந்ததால், இந்த App-ஐ யாரும் பயன்படுத்தாதீர்கள் என்றும், இது ஏமாற்று வேலை என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

News May 15, 2024

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய குழுக்கள்

image

தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்புக்குழு ஆய்வு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சரி செய்ய, வருவாய், தீயணைப்பு, தொழிலக பாதுகாப்பு ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

News May 15, 2024

IPL: பஞ்சாப் அணிக்கு தொடரும் சோகம்

image

PBKS-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மே 19ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ஷிகர் தவான், ரபாடா, சாம் கரண், லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ் ஆகிய 6 வீரர்கள் பங்கேற்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய பஞ்சாப் அணி, தற்போது 6 முக்கிய வீரர்கள் இல்லாமல் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

News May 15, 2024

கடைசி 5 ஓவர்களில் அதிக ரன் குவித்தவர்கள்

image

லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். 3 Four, 4 Six என விளாசிய அவர், 25 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில், கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
▶ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (DC) – 252 ▶தினேஷ் கார்த்திக் (RCB)- 226 ▶நிகோலஸ் பூரன் (LSG) – 211 ▶டிம் டேவிட் (MI) – 205.

News May 15, 2024

தனி மனித உணர்வுக்கு மதிப்பளியுங்கள்

image

தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து, தரம் தாழ்த்தி பேசுவது ஏற்புடையது அல்ல என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனது மனைவி சைந்தவியை பிரிந்தது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், அனைவரிடமும் கலந்தாலோசித்து, இருவரும் பரஸ்பரமாக தான் பிரிந்தோம் என்றும், ஆதங்கமான விமர்சனங்கள் எங்கள் மனதை காயப்படுத்துகிறது என்பதால், தனி மனிதனின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

News May 15, 2024

சவுக்கு சங்கரை சுற்றும் கதைகள்

image

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தற்போது, அவரது தோழி ஒருவரது பெயரும் சமூக வலைதளங்களில் அடிபடுகிறது. சவுக்கு சங்கர், அவரது பத்திரிகையாளர் தோழிக்கு தி.நகரில் பல கோடி மதிப்புள்ள வீட்டினை வாங்கிக் கொடுத்திருப்பதாக சவுக்கு எதிர்ப்பாளர்கள் பேசி வருகின்றனர். இது உண்மையா என்பது போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும்.

News May 15, 2024

கனடாவில் ‘சூப்பர் விசா’ திட்டம் அறிமுகம்

image

கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர ‘சூப்பர் விசா’ திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் 5 ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா சென்ற பிறகு, இந்த விசாவின் காலவரம்பை நீட்டிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

News May 15, 2024

சிங்கப்பூர் அமைச்சரவையில் இந்திய வம்சாவளிகள்

image

சிங்கப்பூரில் தற்போது துணை பிரதமராக பதவி வகிக்கும் லாரன்ஸ் வோங் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அவரது புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த முரளி பிள்ளை சட்டம் & போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர்களாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவியன் பாலகிருஷ்ணன், சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோரும் அமைச்சரவையில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

CUET தேர்வுகள் தொடங்கியது

image

மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான CUET நுழைவுத் தோ்வு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 380 நகரங்களிலும், வெளிநாடுகளில் 26 இடங்களிலும் நடைபெறும் இத்தேர்வுக்கு, 13 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுகள் ஒரே நாளில் காலை 10-11, மதியம் 12.15-1, 3-3.45 என 3 பகுதிகளாக கணினி அடிப்படையில் மற்றும் நேரடி எழுத்துத் தோ்வு முறைகளில் நடைபெறுகிறது.

error: Content is protected !!