News May 15, 2024
சவுக்கு சங்கரை சுற்றும் கதைகள்

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தற்போது, அவரது தோழி ஒருவரது பெயரும் சமூக வலைதளங்களில் அடிபடுகிறது. சவுக்கு சங்கர், அவரது பத்திரிகையாளர் தோழிக்கு தி.நகரில் பல கோடி மதிப்புள்ள வீட்டினை வாங்கிக் கொடுத்திருப்பதாக சவுக்கு எதிர்ப்பாளர்கள் பேசி வருகின்றனர். இது உண்மையா என்பது போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும்.
Similar News
News December 16, 2025
குமரி: திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை!

திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் அரசு ஒப்பந்ததாரர் அருண்பால் (39). இவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இதன் தீர்ப்பு வர இருந்த நிலையில், அதிகாலை அருண்பால் குட்டக்குழியில் உள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருவட்டாறு போலீசார் விசாரணை.
News December 16, 2025
35 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயமாக செய்யணும்!

35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுமாம். மேலும், ரத்த ஓட்டம் சீராவதால், high BP, சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி நடக்க தொடங்குங்க. SHARE IT.
News December 16, 2025
விஜய் அரசியல் வருகைக்கு இதுவும் காரணம்: SAC

சினிமாவில் நடித்து எவ்வளவோ சம்பாதிப்பதை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக, அவரது தந்தை SA சந்திரசேகர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய் மனதில் உருவானதற்கு அவர் நடித்த சில படங்களும் கூட காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரையுலகம், சமூகம், அரசியல் என எதுவாக இருந்தாலும் மாற்றங்களை யாராலும் மாற்ற முடியாது என்றும் SAC கூறினார்.


