India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ₹7,961 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை என்று RBI தெரிவித்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக RBI 2023 மே மாதம் அறிவித்தது. அப்போது ₹3.56 லட்சம் கோடி மதிப்பு ₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதில் 97.76% திரும்பி வந்து விட்டதாகவும், 2.24% திரும்பவில்லை என்றும் RBI தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 , 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக் கல்வித்துறை அனுமதி கேட்டுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியும், முடிவுகளை ஆன்லைனில் பதிவேற்றும் பணிகளும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், திட்டமிட்டபடி மே 6ல் +2 தேர்வு முடிவுகளையும், அதன்பிறகு 10, +1 தேர்வு முடிவுகளையும் வெளியிட அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு யாரும் மாற்றாக வர முடியாதென இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அஜித் அகர்கர் புகழாரம் சூட்டியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘துணைக் கேப்டன் தொடர்பாக எதுவும் ஆலோசிக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் சிறப்பாக வழிநடத்தி வெற்றிப்பெற வைத்துள்ளார். பந்துவீச்சிலும் பாண்டியா தனது திறமையை வெளிப்படுத்துவார்’ என்றார்.
இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கத் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் பகிர விரும்புவோர், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த ஆலோசனை அளிக்க விரும்புவோர் www.tnonlinegamingauthority.com இணையத்தளம், tnoga@tn.gov.in மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் 4 சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியுடன் விளையாட விரும்புவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். அணித் தேர்வு குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தேர்வு குழுத் தலைவர் அகர்கருடன் சேர்ந்து விளக்கம் அளித்த ரோஹித், 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்புவதற்கான காரணத்தை தற்போது தெரிவிக்க இயலாது, அமெரிக்காவில் தெரியப்படுத்துவேன் என்றார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், அதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் எனக் கூறியுள்ளது.
விராட் கோலியின் பார்ம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரும் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கோலி நல்ல பார்மில் இருப்பதாகவும், ஐபிஎல்லில் 500 ரன்கள் வரை குவித்திருப்பதாகவும் தெரிவித்தனர். கோலியுடன் இணைந்து ஓப்பனிங் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு, சூழ்நிலைக்குத் தகுந்தபடி முடிவெடுக்கப்படும் என்றார் ரோஹித்.
டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு ரிங்கு சிங், கேஎல் ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து ரோஹித் சர்மாவும், அகர்கரும் விளக்கமளித்துள்ளனர். ரிங்கு சிங் தவறு இழைக்கவில்லை என்றும், மேலும் ஒரு பவுலர் தேவை என்பதாலேயே அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ராகுலை விட பண்ட், சாம்சன் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதால் 2 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டனர்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8இல் வெற்றி பெற்றுள்ள RR அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி பெற்ற SRH அணி புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று சூறைக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கோடை வெயில் நாளுக்கு நாள் தமிழகத்தில் வாட்டி வதைத்து வருகின்றது. இந்தச் சூழலில் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, நாமக்கல், வேலூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.