India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேஷம் – ஆரோக்கியம் மேம்படும்
ரிஷபம் – வாய்ப்புகள் கிடைக்கும்
மிதுனம் – முயற்சிக்கு ஏற்ற பலன்
கடகம் – கவனமாக இருக்க வேண்டும்
சிம்மம் – பணி சுமை ஏற்படும்
கன்னி – குடும்பத்தில் மகிழ்ச்சி
துலாம் – பண வரவு சிறப்பாக இருக்கும்
விருச்சிகம் – நினைத்த காரியம் கைகூடும்
தனுசு – சிறு தடைகள் உண்டாகும்
மகரம் – பணியிடத்தில் அனுசரித்து செல்லவும்
கும்பம் – கருத்து வேறுபாடு நிலவும்
மீனம் – பணத்தை கவனமாக கையாளவும்
புலம்பெயர்வோரைக் கண்டு இந்தியா அச்சத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புலம் பெயர்வோரை வரவேற்பதே அமெரிக்க பொருளாதாரம் வளர்வதற்குக் காரணம் என்றார். பொருளாதாரத்தில் சீனா ஸ்தம்பிக்கவும், ஜப்பான் பிரச்னையைச் சந்திப்பதற்கும், ரஷ்யா, இந்தியாவில் பிரச்னை நிலவவும், புலம்பெயர்வோர் மீதான ஒருவித அச்சமே காரணமென்றும் அவர் தெரிவித்தார்.
பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி பிரஜ்வாலின் வீடியோக்களை வெளியிட்டதாகக் கருதப்படும் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் திடீரென மாயமாகி உள்ளார். 13 ஆண்டுகள் பிரஜ்வாலிடம் டிரைவராகப் பணியாற்றிய அவருக்கும், பிரஜ்வாலுக்கும் நில விவகாரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக்குழு முன் ஆஜராக உத்தரவிட்ட நிலையில் கார்த்திக் மாயமாகி உள்ளார். இது கர்நாடக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம் ஏற்காடு உள்பட 12 மாவட்டங்களில் இயற்கை சூழலை பாதுகாக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது சென்னை உள்பட 17 மாவட்டங்களில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறுவதாகவும் விரைவில் தமிழகம் முழுவதும் திட்டம் அமலாகும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு ஆஸ்கர் விருதைப் பெற்று தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படம், ₹124 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. அப்படத்தில் அனில் கபூர் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஷாருக்கிடமும், பிறகு அமிதாப் மற்றும் கோவிந்தாவிடமும் படக்குழு பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் அவர்கள் 3 பேரும் மறுக்கவே, அனில் கபூர் நடித்தார். அந்தத் திரைப்படம் உலக அளவில் ₹3,145 கோடி வசூலைக் குவித்தது.
நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் பணவீக்கம் பலமடங்கு அதிகரித்து விட்டதாகவும், தேர்வுத்தாள்கள் அடிக்கடி கசிய விடப்படுவதாகவும், ஊழல்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு வேலைவாய்ப்புக்கு முடிவுகட்டும் திட்டங்களை பாஜக கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார்
சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மேற்குவங்க அரசு தரப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரம் தனக்கே இருப்பதாக சிபிஐ கூறுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம், ராணுவத்தினர் முகாமில் குற்றமிழைத்தாலும் மாநில போலீசிடமே ஒப்படைக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.
மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ், பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பெண்ணிடம் அவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகாரிகா கோஸ் தனது எக்ஸ் பக்கப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் 2 பேர் அரைசதம் அடித்தனர். முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். நிதிஷ்குமார் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரிகள், 8 சிக்சர்களும் அடங்கும்.
தமிழகத்தில் உள்ள 11,113 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 8030 தொடக்கப் பள்ளிகளிலும், 3083 நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்தி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.