India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கைதான கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரவீன் குமார், கெஜ்ரிவாலை சிறையில் அமைத்ததற்கு டெல்லி மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், இதற்கு வாக்குகளால் மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
கள்ளச்சந்தையில் IPL டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். CSK-PBKS இடையேயான IPL போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை, கள்ளச்சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திருவல்லிக்கேணி பகுதியில் 13 பேரை கைது செய்து, 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிா்வாகிகள் குழுவில், மகளிருக்கு 3இல் 1 பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிா்வாகிகள் குழுவில் 3 இடங்களும், 6 முதுநிலை நிா்வாக உறுப்பினா் பதவியில் 2 இடங்களும், அலுவலா் பொறுப்பில் 1 இடமும் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். வரும் 2024-25 வழக்கறிஞர் சங்கத் தோ்தலில், பொருளாளா் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
✍பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை. பிறகென்ன கவலை? ✍நல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும். ✍நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. ✍சாவி இல்லாத பூட்டு இருக்காது. அதுபோல், தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது. ✍உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றும். ✍சுறுசுறுப்பாக இருங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து சிறுபான்மை மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். பீகாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியினர் நலம்விரும்பிகள் போல நடித்து, பின்னா் முகத்தில் சேற்றை வீசுவாா்கள் என்றும், இஸ்லாமிய சகோதரா்கள் அவா்களை நம்பிவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1802 – வாஷிங்டன் டி.சி. நகரமாக்கப்பட்டது.
1837 – ஏதென்ஸ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1913 – இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ‘ராஜா ஹரிஸ்சந்திரா’ வெளியானது.
1921 – வட அயர்லாந்து, தெற்கு அயர்லாந்து என இரண்டாகப் பிரிந்தது.
1939 – சுபாஷ் சந்திர போஸ் அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.
1941 – பிபிசி தமிழோசை வானொலி தொடங்கப்பட்டது.
அக்னி நட்சத்திர வெயில் (கத்திரி வெயில்), நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் தான், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் மாா்ச் 2ஆவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதனால், இம்முறை அக்னி வெயில் அதிகமாக இருக்காது என்றும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலையாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், தமிழக வீரர் நடராஜன் அதிரடி காட்டியுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ஹெட்மெயரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி, புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான பர்பிள் கேப்பையும் பெற்றுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 137
▶குறள்: ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
▶பொருள்: ஒழுக்கம் உள்ளவர்கள் வாழ்வில் உயர்வை அடைவார்கள். ஆனால், ஒழுக்கத்திலிருந்து தவறுபவர்கள் கிடைக்கக் கூடாத பெரும் பழியை அடைவார்கள்.
மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையப் போவது உறுதி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். உ.பி.யில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல் போகும் என்றும், ராகுல் காந்தி தனது கட்சியைக் கண்டு பிடிக்க யாத்திரை செல்வார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உள்கட்சி பூசல்களால் இந்தியா கூட்டணி சிதைந்து போயுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.