India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரோஹித் சர்மா மேலும் 6 சிக்சர்களை அடித்தால், ODI-யில் அதிக சிக்ஸர்கள் விளாசிய 2ஆவது வீரர் எனும் பெருமையை பெறுவார். ரோஹித் 326 சிக்ஸர்களை விளாசி 3ஆவது இடத்திலும், WI அணியின் கெயில் 331 சிக்ஸர்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். பாக். அணியின் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான இன்றையப்போட்டியில் ரோஹித் புதிய சாதனையை படைப்பாரா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த ‘பாரத்’ அரிசி விற்பனை, மறு அறிவிப்பு வரும் வரை தொடருமென, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். மாநிலங்கள் தங்கள் நலத்திட்ட உதவிகளுக்கு தேவைப்படும் அரிசியை, இந்திய உணவுக்கழகத்திடம் இருந்து குவிண்டாலுக்கு ₹2,800 என்ற விலையில், நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் எனக் கூறிய அவர், மின்னணு ஏலத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே, திமுகவைச்சேர்ந்த ஜாபர் சாதிக், ராமநாதபுரம் இப்ராஹிம் உள்ளிட்டோர் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதாகியிருப்பது, குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது ஆதிகேசவ பெருமாள் கோயில். பெருமாளின் சயன கோலத்தில் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, ராம அவதாரத்தில் தம்பி லட்சுமணனாகவும், கிருஷ்ண அவதாரத்தில் அண்ணன் பலராமராகவும், கலியுகத்தில் ராமானுஜராகவும் பிறந்ததாக ஆன்மிகம் சொல்கிறது. இக்கோயில் மூலவரான ராமானுஜரை வணங்கினால் ராகு தாேஷத்தால் உருவாகும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என கூறப்படுகிறது.
துணை முதல்வர் பதவியை கேட்டு திமுகவிடம் காங்கிரஸ் நிபந்தனை விதிப்பது சரியில்லை என்று அக்கட்சியின் மூத்தத்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படுவது குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஈவிகேஎஸ், கனவு காண்பதில் தவறு இல்லை என்றும், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது எனவும் கூறினார்,
நியூயார்க் இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், “காலித் முகமது உள்ளிட்ட மூவரும் ஒப்பந்தத்தின்படி, அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தால், மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும். இனி அதற்கு வாய்ப்பில்லை” என கூறியுள்ளார்.
முன்னோர்கள் முறையாகக் கர்ம காரியங்களைச் செய்யாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும். முன்னோர்கள் வாங்கிய சொத்துக்கள் அவர்களின் வாரிசுகளுக்கு உரிமையாவதைப் போல அவர்களின் கர்மாக்களும் வாரிசுகளையேச் சேர்கின்றன. எனவே பித்ருகளின் பாவங்களைப் போக்க ஆடி அமாவாசையில் (இன்று) விரதமிருந்து, தர்ப்பணம் கொடுத்து, கோமாதாவை வழிபட வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் 100 மீ., ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதி & இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர் உலகின் அதிவேக வீரர் என்று அழைக்கப்படுவதால் இந்த மின்னல் வேக ஓட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். நடப்பு சாம்பியன் ஜேக்கப்ஸ் (இத்தாலி), லைல்ஸ் (USA), லூயி (UK), தாம்சன் (ஜமைக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அரையிறுதி களம்காணவுள்ளனர்.
*போதைப்பொருள் இல்லாத கல்வி வளாகங்களை ஆளுநர்கள் உருவாக்க வேண்டும் – மோடி
*தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் – அன்புமணி
*2024-25 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லாபம் 81% வீழ்ச்சியடைந்துள்ளது.
*இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் INS ஷல்கி இலங்கை சென்றுள்ளது.
*2ஆவது ODI கிரிக்கெட் போட்டியில் IND – SL இன்று மோதவுள்ளன.
✍நிம்மதியான வாழ்க்கையை அடைய இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று விட்டு கொடுப்பது; இல்லையென்றால் விட்டு விலகுவது. ✍உண்மைக்கு மகத்தான ஆற்றல் உண்டு; அதை யாராலும் மாற்றிடவோ அல்லது மறைத்திடவோ முடியாது. ✍ தீமையை நன்மையால் வெல்லுங்கள்; பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். ✍மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை; அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்வான்.✍அதிகம் பேசுபவனைவிட பிறரது பேச்சுக்கு செவிமடுப்பவனே அறிவாளியாவான்.
Sorry, no posts matched your criteria.