news

News August 4, 2024

தன் மீதான விமர்சனங்களுக்கு அக்சய் குமார் பதில்

image

தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் அக்சய் குமார் காட்டமாக பதிலளித்துள்ளார். நான்கு, ஐந்து படங்கள் சரியாக போகவில்லை என்ற காரணத்தால், கவலைப்பட வேண்டாம் நண்பரே என, தனக்கு மெசேஜ்கள் வருவதாக தெரிவித்த அவர், தான் இன்னும் இறக்கவில்லை என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். அக்சய் குமார் நடித்துள்ள ‘கேல் கேல் மெய்ன்’ படம் வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.

News August 4, 2024

நாளை கடைசி: அஞ்சல் துறையில் 44,228 பணியிடங்கள்

image

இந்தியா ஃபோஸ்டில் காலியாகவுள்ள GDS, BPM, ABPM உள்ளிட்ட 44,228 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.5) கடைசி நாளாகும். இதற்கு <>indiapostgdsonline.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ₹100 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், SC, ST மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

News August 4, 2024

நெல்லை புதிய மேயர் யார்? அமைச்சர்கள் ஆலோசனை

image

நெல்லை மேயர் தேர்தல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால், தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, புதிய மேயரை
தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத்தேர்தல் நாளை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News August 4, 2024

இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கும்: மேரிகோம்

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைக்கும் என்று, குத்துச்சண்டை முன்னாள் வீராங்கனை மேரிகோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இந்தியா 3 பதக்கங்கள் வென்றுள்ளதாகவும், நிச்சயம் மேலும் பதக்கங்கள் கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். இந்திய வீரர்- வீராங்கனைகள் அனைவரும் பதக்கம் வெல்ல வேண்டுமென்று பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

News August 4, 2024

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்

image

ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தைக்கு கடிதம் மூலம் மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சதிஷ் என்ற பெயரில் வந்த அந்த மிரட்டல் கடிதத்தில், குழந்தையை கடத்தி விடுவதுடன், குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 4, 2024

3,400 பேரிடம் ₹200 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

image

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி, நாடு முழுவதும் 3,400 பேரிடம் ₹200 கோடி மோசடி செய்த 4 உ.பி. இளைஞர்களை புதுச்சேரி போலீஸ் கைது செய்தது. பேஸ்புக் பக்கத்தில் போலி விளம்பரம் வெளியிட்டு, அதில் தொடர்பு கொண்ட 3,400 பேரிடம், இந்த நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட புதுச்சேரி நபர் ஒருவரின் புகாரின்பேரில் விசாரணை நடத்தி, 4 பேரையும் சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது.

News August 4, 2024

முறைகேடு செய்து பாஜக 79 இடங்களில் வெற்றி: காங்கிரஸ்

image

MP தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வென்றுள்ளதாக காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ‘வோட் பார் டெமாக்ரசி’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, தேர்தல் ஆணையம் முதலில் தெரிவித்த வாக்கு சதவீதத்திற்கும், பின்னர் கூறியதற்கும் 4.7% வித்தியாசம் இருப்பதாக, CONG மூத்தத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான
சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

சென்னையில் 20 சுங்க இலாகா அதிகாரிகள் டிரான்ஸ்பர்

image

சென்னையில் 4 கண்காணிப்பாளர்கள் உள்பட 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கக்கடத்தல் தொடர்வதாக கிடைத்த தகவலின்பேரில், அண்மையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.14 கோடி மதிப்பு தங்கம் உள்ளிட்டவை சிக்கிய நிலையில், 20 பேரின் இடமாற்றம் நடந்துள்ளது. ஆனால் கடத்தலுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

News August 4, 2024

சற்றுமுன்: பாஜக நிர்வாகி கைது

image

பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெரவள்ளூர் போலீசார், அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 1ஆம் தேதி அப்பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, அவர் மீது பாலியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 4, 2024

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் தான்: தி கிரேட் காளி

image

பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட் செய்யப்படுவதாக தி கிரேட் காளி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும் என்ற அவர், உலகில் சில திருமணங்களும், WWE போட்டிகள் கூட ஸ்க்ரிப்ட் செய்யப்படுகின்றன எனக்கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்தி பிக் பாஸ் 4ஆவது சீசனில் தி கிரேட் காளி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!