news

News August 4, 2024

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: கேரள அரசு

image

வயநாடு நிலச்சரிவு பேரிடர் தொடர்பாக தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தவறான தகவல் பரவி வருவதாக கூறிய அவர், குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக பரவும் செய்தி உண்மையல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

News August 4, 2024

‘கொட்டுக்காளி’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்: சூரி

image

தன்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக ‘கொட்டுக்காளி’ இருக்கும் என சூரி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம் எனவும், உண்மைக்கு நெருக்கமான படம் என்றும் கூறியுள்ளார். மேலும், அனைவரும் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். வரும் 23ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

News August 4, 2024

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜோகோவிச்

image

பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸுடன் அவர் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஜோகோவிச் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் அல்கராஸை வீழ்த்தினார். இதன்மூலம், ஜோகோவிச் தங்கம், அல்கராஸ் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். <<-se>>#Olympics<<>>

News August 4, 2024

திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

image

கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். Ex CM கருணாநிதியின் 6ஆவது நினைவு தினம் ஆக.7ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், திமுக மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்த அழைப்பு விடுத்துள்ள ஸ்டாலின், கருணாநிதி தரும் உத்வேகத்துடன் நம் லட்சியப் பயணத்தை தொடர்வோம், வெற்றிகளை குவிப்போம் என சூளுரைத்துள்ளார்.

News August 4, 2024

சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்

image

காவல்துறையினரை தகாத வார்த்தையால் திட்டியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

News August 4, 2024

6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெஃப்ரி வாண்டர்சே

image

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், இலங்கை வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான அவர், ரோஹித், கில், ஷிவம் துபே, கோலி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய IND அணி, வாண்டசேவின் சுழலால் தற்போது, 241 ரன்களை துரத்துவதில் தடுமாறி வருகிறது.

News August 4, 2024

இலங்கைக்கு எதிராக தடுமாறும் இந்திய அணி

image

இலங்கைக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. கொழும்புவில் முதலில் பேட்டிங் செய்த SL, 240/9 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய IND வீரர்கள், ஆரம்பத்தில் அதிரடி காட்டினர். இதையடுத்து, ரோஹித் 64, கில் 35, துபே 0, கோலி 14, ஸ்ரேயாஸ் 7, ராகுல் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். தற்போதுவரை IND 23.2 ஓவர்களில் 147/6 ரன்கள் எடுத்துள்ளது.

News August 4, 2024

ஃபார்முலா 4 கார் ரேஸிங் டிக்கெட் விற்பனை தொடக்கம்

image

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட்(F4) போட்டிக்கான டிக்கெட் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்தாண்டு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகள் மீண்டும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News August 4, 2024

ஓராண்டுக்குப் பின் கர்ப்பிணிக்கு கிடைத்த நீதி

image

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவர் உள்பட 17 பேரால் நிர்வாணமாக வீதியில் நடக்கவைத்து சித்ரவதை செய்யப்பட்டார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு நீதி கிடைத்துள்ளது. அப்பெண்ணின் கணவர் உள்பட 14 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 3 பெண்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

வரி ஏய்ப்பு நோட்டீஸ் குறித்து இன்ஃபோசிஸ் விளக்கம்

image

இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், 2017-22 வரையிலான ஐந்தாண்டுகளில் 32,403 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக, DGGI நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், 2018 நிதியாண்டிற்கான வரிக் கோரிக்கையான ₹3,898 கோடியை DGGI திரும்ப பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், மீதமுள்ள ₹28,505 கோடி வரி ஏய்ப்பு புகார் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

error: Content is protected !!