India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தங்களது முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று 97 நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகின்றன. ஏர்டெல், ONGC, மாரிகோ, தீபக் நைட்ரேட், ஹனிவெல், மதர்சன் சுமி, டாடா கெமிக்கல்ஸ், அவந்தி ஃபீட்ஸ், ஓரியன்ட் சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரிசல்ட் வெளியிடுகின்றன. இவை, சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் காத்திருந்தனர். எனினும், வானிலை மைய அதிகாரிகளுடன் ஆலோசித்த மாவட்ட ஆட்சியர்கள், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் 16 குடும்ப உறுப்பினர்களை இழந்த மன்சூர், இதுவரை வெறும் 4 உடல்களையே மீட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். மனைவி, இரு குழந்தைகள், தாய், தங்கை என ஒட்டு மொத்த உறவுகளையும் இழந்ததாகவும், தனது மகளுடைய உடலை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், மனதை பதற வைக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். தன்னுடைய ஒட்டு மொத்த உலகத்தையும் நிலச்சரிவு எடுத்துக்கொண்டதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக தெரிகிறது. சுயசான்று அடிப்படையில் அரசு உடனடி கட்டட அனுமதி வழங்குகிறது. ஆனால், இதற்கு இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் 1 சதுர அடிக்கு ₹60ஆக இருந்த கட்டணம், தற்போது ₹125வரை உயர்ந்துள்ளது. இதனால், 1,000 சதுர அடி கட்ட ₹60,000 கூடுதல் செலவாவதாக புகார் எழுந்துள்ளது.
கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தான் ஆசைப்பட்ட த்ரில்லர், ஹாரர், காதல், அட்வென்ச்சர் உள்ளிட்ட அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டதாகவும், வரலாற்றுக்கதைகளில் நடிக்கும் ஆசை இல்லை என்றும் கூறினார். மேலும், ‘வடசென்னை 2’ படம் உருவானால், கண்டிப்பாக சந்திரா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பல்வேறு குழுக்களுக்கான தலைவர்கள், தேர்தலின்றி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது கணக்குக்குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, எஸ்.டி., எஸ்.சி. குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளன. இந்த குழுக்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருப்பர். ஒவ்வொரு குழுவுக்கும்
ஒரு தலைவர் நியமிக்கப்படுவார்.
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்கான ‘பரிவாஹன்’ இணையதளம் அடிக்கடி சர்வர் பிரச்னையை எதிர்கொள்வதால், பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வரில் பிரச்னை இருப்பது உண்மைதான் எனவும்,
இதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்வதுடன், சாலைகளில் கவனமாகச் செல்லவும்.
ஜார்க்கண்ட் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ சர்யு ராய், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதி எம்.எல்.ஏவான அவர், மாநில ஜேடியு கட்சியின் மாநிலத் தலைவர் சஞ்சய் குமார் ஜா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். இம்மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் திடீரென நிதிஷ் கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.