India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இருண்ட கால ஆட்சியில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். TN அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விலகியுள்ள நிலையில், மக்கள் மன்றம், நீதிமன்றத்தின் கட்டாயத்தால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். இந்த நடவடிக்கை தானாக எடுக்கப்பட்டது அல்ல; தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரையை தவிருங்கள் *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்கள் *வலிநிவாரணி மாத்திரைகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட் உணவை தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும்.
➤மேஷம் – துன்பம் ➤ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – ஆதரவு ➤ கடகம் – பெருமை ➤ சிம்மம் – பயம் ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – பரிசு ➤ தனுசு – உயர்வு ➤ மகரம் – பொறுமை ➤ கும்பம் – ஆதாயம் ➤ மீனம் – லாபம்
பெற்றோர் விவாகரத்தால் வாழ்க்கை தலைகீழாக மாறியதாக நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவரது தந்தை கமல்ஹாசன், தாயார் சரிகா இருவரும் பிரிந்தபோது ஸ்ருதிஹாசன் சரிகாவுடன் மும்பைக்கு சென்றார். ஆனால், அங்கு பெரும் சிரமத்தை அனுபவித்ததாக கூறிய அவர், BMWவில் இருந்த வாழ்க்கை லோக்கல் டிரைனுக்கு மாறியது எனத் தனது கசப்பான அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வரும் நிலையில்,விஜய் நடத்தியது பூத் கமிட்டி கூட்டம் போல இல்லை; பொதுக்கூட்டம் போல உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், 2011-ல் வடிவேலுவுக்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறவில்லை என்றும் அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம் என்றும் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த MI அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த இந்த அணி, 5 தொடர் வெற்றிகள் மூலம் ராக்கெட் வேகத்தில் மேலே வந்துள்ளது. MI அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் (Waziristan) தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இச்சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ED வழக்கில் சுப்ரீம் கோர்ட்(SC) நாளை ஜாமினை நீட்டிக்க வாய்ப்புள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை ED கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்.26-ம் தேதி அவருக்கு SC ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பதவியா? ஜாமினா? என முடிவெடுக்க SC கெடு விதித்திருந்தது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து J&K-ல் பதற்றம் நிலவிவரும் நிலையில், தடைசெய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-இ-இஸ்லாமி(JeI) புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. த ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (JDF) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அக்கட்சிக்கு முன்னாள் JeI நிர்வாகி ஷமீம் அகமது தோக்கர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். J&K உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ChatGPT என்ற AI (செயற்கை நுண்ணறிவு) தனது உயிரை காப்பாற்றியதாக பிரான்ஸ் நாட்டு பெண் மார்லி (27) தெரிவித்துள்ளார். அதிக வியர்வை, சரும எரிச்சல் போன்றவற்றால் அவதிப்பட்ட அவர், மருத்துவர்களிடம் சோதனை செய்தபோது ஏதும் இல்லையென்று கூறிவிட்டனராம். ஆனால், அவருக்கு அரிய வகை கேன்சர் இருக்கலாம் என்று ChatGPT சொல்ல, மீண்டும் மருத்துவரை அணுகி அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.