India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரையில் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்று அம்மாவட்ட SP ஆபீஸில் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, அதிமுக நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, மனு கொடுக்க வந்த பாஜகவுடன் ஸ்வாஹா பாடிவிட்டு வந்திருப்பதாக கலகலப்பாக கூறினார். மேலும், 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி என்ற அவர், உண்மையான விடியல் அப்போதுதான் என்றும் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கு ஜன.15, 16, 17 அரசு விடுமுறை மற்றும் ஜன.18 ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில், வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜன.14-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுமா என அரசு ஊழியர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அறிவிப்பை நாளைக்குள் அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருணாநிதி, CM ஸ்டாலினை போல DCM உதயநிதியும், அயலக தமிழர் நலனுக்கு துணை நிற்பார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அயலக தமிழர் விழாவில் பேசிய அவர், CM ஸ்டாலினை சிறுவயது முதல் இப்போது வளர்ச்சி பெற்றது வரை பார்த்துள்ளதாக கூறிய அவர், உதயநிதியும் அவரது தனி பாணியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக பாராட்டினார். உதயநிதி திமுகவுக்கு கிடைத்திருக்கிற ஒரு வஜ்ர ஆயுதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தென்மாவட்டங்கள் & டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்போது எழும் சட்ட பிரச்னைகள், எதிர்ப்புகள் போன்றவை ஒரு விளம்பரம் தான் என்ற பொது கருத்து உண்டு. இந்நிலையில், ’ஜன நாயகன்’ படத்தை தடுக்க முயல்வது விஜய்க்கே மேலும் பலம் சேர்க்கும் என மல்லை சத்யா கூறியுள்ளார். எனவே, படத்தை வெளியிட மத்திய அரசு (CBFC) அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?

இந்தியாவை உலக அரங்கில் கெளரவித்த பாக்ஸிங் லெஜண்ட் மேரிகோம் தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். மிகவும் நம்பிய கணவர் நினைத்தபடி இல்லை; பொய் சொல்லி சொத்துகளை மோசடி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வாழ்க்கை ஒரு நீண்ட குத்துச்சண்டை போட்டிபோலவே இருப்பதாகவும், கடவுள் தனக்கு வலிமை அளிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 2005-ல் திருமணமான இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

சோமநாதர் ஆலய சுயமரியாதை விழாவில் பேசிய <<18826188>>PM மோடி<<>>, இந்த ஆலயம் 1,000 ஆண்டுகால அசைக்க முடியாத நம்பிக்கை என்று தெரிவித்தார். சுதந்திரத்திற்கு பின் ஆலயத்தை புனரமைக்க படேல் முயன்றபோது எதிர்த்த சக்திகள் சில, இன்றும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அந்த சக்திகள் இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக சதித்திட்டங்களை தீட்டி வருவதாக கூறிய அவர், அவற்றை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உங்கள் கவலைகளை யாரிடமாவது சொன்னால் ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறீர்கள். சத்தியமாய் சொல்கிறேன், அதைப் பற்றி அவர்களுக்கு துளியும் கவலை கிடையாது. சரி, நான்கு வார்த்தை நன்றாய் சொல்லிவிட்டு எப்படியாவது அங்கிருந்து ஓடிவிடலாம் என்பதுதான் அவர்கள் குறிக்கோள் என செல்வராகவன் X-ல் பதிவிட்டுள்ளார். அடிக்கடி அட்வைஸ் கொடுத்துவரும் செல்வாவின் இந்த பதிவிற்கு உங்கள் ரியாக்ஷன் என்ன?

நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சந்திரசேகர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்து, ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவர் சொன்ன காரணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நெல்லையிலிருந்து ஏராளமான கனிமவளங்கள் கேரளாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதுகுறித்து உங்களிடம் (ஸ்டாலின்) பலமுறை எடுத்துக்கூறியும், எந்த பலனும் இல்லை என்பதால், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வதோதராவில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் ODI-ல் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் இருவரும் 50 அடித்து நியூசிலாந்துக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். 21 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது. வரும் ஓவர்களில் இந்தியா விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே நியூசிலாந்தின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியும். முன்னதாக, 4 ரன்னில் நிக்கோலஸின் கேட்ச்சை குல்தீப் தவறவிட்டார்.
Sorry, no posts matched your criteria.