India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2 நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைதான மீனவர்கள் காரைநகர் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்று நெடுந்தீவு அருகே 11 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இப்பிரச்னை நீண்ட காலமாக உள்ளதால், நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

வெள்ளி விலையில் இன்று மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹4 குறைந்து ₹256-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 குறைந்து ₹2,56,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி விலை ₹4,000 உயர்ந்த நிலையில், இன்று அது அப்படியே தலைகீழாக குறைந்திருப்பது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

<<18740078>>இடைநிலை ஆசிரியர்கள்<<>> தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே போராடி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றும், அவர்களை கைவிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அரசு ஒரு கட்டத்தில் நிற்பதாக கூறிய அவர், போராட்டம் நடத்துபவர்கள் மற்றொரு கட்டத்தில் இருப்பதாகவும், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

தங்கம் விலை இன்று(ஜன.3) 22 கேரட் கிராமுக்கு ₹60 குறைந்து ₹12,520-க்கும், சவரன் ₹480 குறைந்து ₹1,00,160-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு ஆண்டு சரிவைக் கண்ட தங்கம், நேற்று சவரனுக்கு ₹1,120 உயர்ந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ₹480 குறைந்ததால் இன்றைய தினம் நகை வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

CM ஸ்டாலின் தொடங்கிவைத்த வைகோவின் ‘சமத்துவ நடைப்பயணத்தை’ காங்கிரஸ் <<18740431>>புறக்கணித்ததால்<<>> திமுகவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்ற கருத்து மேலும் வலுவடைந்துள்ளது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், கூட்டணி பற்றி தவெக தலைவர் விஜய்தான் அறிவிப்பார் என அவர் பதிலளித்துள்ளார்.

USA-வில் டிரம்ப் நிர்வாகம், குடியேற்ற சட்டங்களை மிக கடுமையாக்கி வரும் நிலையில், இதில் அடுத்த டார்கெட் Marriage Green Card. அமெரிக்கரை திருமணம் செய்தால் கிரீன் கார்டு பெறலாம் என்பதாலேயே, பல திருமணங்கள் நடைபெற்று வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்க குடிமகனை திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்கு பின் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே கிரீன் கார்டு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த வேலு நாச்சியாரின் தியாகமும் தொலைநோக்கு தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என PM மோடி கூறியுள்ளார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார் என்றும் மோடி X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் விடுமுறைக்கு சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் ரயில் ஜன.11, 18, குமரி – தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஜன.13, 20, செங்கல்பட்டு – நெல்லை ரயில் ஜன.9, 16 தேதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் Railone ஆப் (அ) <

காங்., 2026-ல் தேர்தல் நடக்கும்போது நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கான வேலைகளைத் தான் தற்போது செய்கிறார்கள் என்ற அவர், காங்கிரஸார் குதிரை பேரம் பேசுகிறார்கள், ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள் என்றார். மேலும், இந்த பஞ்சாயத்தை சரி செய்யவே வாரம் வாரம் TN-க்கு வரும் மேலிட பொறுப்பாளர்களுக்கு டிக்கெட் போட்டே காங்., கஜானா காலியாகிவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹5000 நிதி, ₹2 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை இ-ஷ்ரம் திட்டம் வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். இதனை பெற 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கணும். இந்த கார்டை பெற eshram.gov.in -ல் விண்ணப்பியுங்கள். SHARE.
Sorry, no posts matched your criteria.