India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்பதால் WAY2NEWS உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். அங்கு ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து உதயநிதி நலம் விசாரித்தார். பின்னர், முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்த உதயநிதி, அவருக்கு கருணாநிதி வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பரிசளித்தார். முன்னதாக, நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மத்தியில் உதயநிதி அமர்ந்திருந்தார்.
விஜய்யின் தவெக மாநாட்டுக்கே சென்று, ‘அஜித்தே.. கடவுளே..’ என கோஷம் போட்டு அலறவிட்டனர் தல ரசிகர்கள். தற்போது அதுவே டிரெண்டாகி, உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை கேட்டு அடம்பிடிக்கும் அஜித் ரசிகர்களை பார்த்து, ‘பக்தர்கள் அமைதி காக்கவும்’ என கோயிலில் எழுதப்பட்டுள்ள புகைப்படத்தை சிலர் டிரெண்டாக்கி வருகின்றனர். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்யா..
கேரள கசவு புடவையில் நாடாளுமன்றத்திற்கு வந்த மக்களவை எம்பி பிரியங்கா காந்தி, அவரது பாட்டி இந்திரா காந்தியை நினைவுபடுத்துவதாக பலரும் பேசிவருகின்றனர். அவரது உடை மற்றும் சிகை அலங்காரம் இந்திராவை ஒத்திருந்தது. மக்களுடன் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக இந்திரா காந்தி இது போன்ற புடவைகளை விரும்பியதாகவும், தற்போது பிரியங்கா அதை நினைவு பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
மழைக்காலத்தில் நோய் பரவல் அதிகமாக இருக்கும். எனவே நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் மீது அதிக கவனம் தேவை. குறிப்பாக மழைக்காலத்தில் நாம் அதிக தண்ணீர் குடிப்பதில்லை. தாகம் ஏற்படவில்லை என்பதால் உடலுக்கு தண்ணீர் தேவையில்லை என்று அர்த்தமில்லை அதிக தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது. இதை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
IPL வரலாற்றில் யாராலும் முடியாத சாதனையை இந்திய வீரர் ஜிதேஷ் சர்மா பெற்றுள்ளார். கடந்த முறை IPL ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ₹20 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது. ஆனால், இந்த முறை பழைய தொகையுடன் ஒப்பிடும்போது 5,400% அதிகமாக, அதாவது ₹11 கோடிக்கு RCB அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதுவரை எந்த வீரருக்கும் இந்த அளவு ஊதிய வித்தியாசம் இருந்ததில்லை. இது அவரது திறமைக்கு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது
இனி (90 நாட்களுக்குப் பின்) கூகுள் மேப்ஸில் உள்ள Location History தானாக அழிந்துவிடுமென, கூகுள் தனது பயனர்களுக்கு மின்னஞ்சல் வழியே தகவல் தெரிவித்துள்ளது. எனவே, Google Maps சேமித்து வைத்திருக்கும் பயண விவரங்களை ப்ரைவசிக்காக சேர்த்து வைக்க விரும்புவோர், தங்கள் சாதனங்களில் அதன் பிரதியை சேமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு, Location Services சென்று Export Your Location-ஐ தேர்ந்தெடுத்தால் போதும்.
அதிமுகவை ராணுவ கட்டுப்பாட்டுடன் EPS வழி நடத்துவதாக R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். ADMK கள ஆய்வுக் கூட்டத்தை கலவர ஆய்வுக் கூட்டம் என உதயநிதி விமர்சித்ததை குறிப்பிட்டு பதிலளித்த அவர், தங்களுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து பயந்துபோய் உளறுகிறார் என்றார். மேலும், அதிமுகவை கட்டுக்கோப்பாக EPS வழி நடத்துவதை பார்த்து பொறாமைப்படுவதால் தான் இவ்வாறு அவர் பேசிவருவதாகவும் கடுமையாக சாடினார்.
சம்பளதாரர்களுக்கான நலன்களுக்காக தனது அரசு செயல்படும் என கூறிய டிரம்பின் நிர்வாகத்தில்தான், பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். டிரம்ப் அரசின் முக்கிய நிர்வாகிகளான எலான் மஸ்க், ஸ்காட் பெசன்ட், விவேக் ராமசாமி, லின்டா மெக்மஹோன், ஹோவார்ட் லட்னிக், ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு $340 பில்லியன் (சுமார் ₹ 28 லட்சம் கோடி). இது, 169-க்கும் மேற்பட்ட நாடுகளின் மொத்த ஜிடிபியை விட அதிகம்.
வலுவான புயல் உருவாக வாய்ப்பில்லை என IMD தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது 50 -60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரித்துள்ள வானிலை மையம், டெல்டா மாவட்டங்கள், கடலூரில் நாளையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.