India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு வானிலை பிரேக் விட்டாலும், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
சூரியனின் வெளிப்புற Corona பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள PROBA-3 Satellite துல்லியமான இலக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. Coronagraph, Occulter. 150மீ இடைவெளியில், மெய்நிகர் செயற்கைக்கோளை போல இவை இரண்டும் வலம்வரும். செயற்கை சூரியக்கிரகணம் போல, Occulter சூரியனை மறைக்கும். இதனால் Coronagraph-க்கு சூரியனின் மேற்புறம் தெளிவாக தெரியும், படமும் துல்லியமாக கிடைக்கும்.
2026இல் அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்பேன் என வி.கே.சசிகலா சூளுரைத்துள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுக துடைத்தெறியப்படும் என்றார். அதிமுகவில் நிலவும் அனைத்து மனக்கசப்புகளும் நீங்கி அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று குறிப்பிட்ட அவர், 2026இல் அதிமுகவின் புதிய வரலாறு எழுதப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வியட்நாமில் BOY FRIENDS-களை வாடகைக்கு விடும் தொழில் தற்போது கொடிகட்டி பறக்கிறது. உருவம், தோற்றத்துக்கு ஏற்ப, அவர்களின் வாடகைத் தொகை இருக்கும். “எப்போ கல்யாணம்” என நச்சரிக்கும் தங்கள் பெற்றோரை சமாளிப்பதற்காகவே பாய் ஃப்ரண்டுகளை பெண்கள் வாடகைக்கு எடுக்கிறார்கள். கல்யாண பேச்சு எழுந்தால், வாடகை பாய் ஃப்ரண்டுகளை காட்டி, தாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறி பெண்கள் சமாளித்து விடுகிறார்களாம்.
ஜெய்ஸ்வால் இன்றைய தலைமுறையின் பயமறியாத முக்கிய இளம் வீரர்களில் ஒருவர் என ஆஸி. பவுலர் மிட்செல் ஸ்டார்க் புகழ்ந்துள்ளார். ஜெய்ஸ்வால் இந்தியாவிற்காக நீண்ட காலம் விளையாடுவார் என்றும், சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்ளும் திறன் அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய பவுலிங் மெதுவாக வருவதாக ஜெய்ஸ்வால் கூறியது, உண்மையிலேயே தனக்கு கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்திய மார்க்கெட்டில் SUV மாடல் கார்களின் ஆதிக்கத்தை மாருதி சுசூகியின் Baleno உடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 16,293 Baleno கார்கள் விற்பனையாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் Creta 15,452, Tata Punch 15,435, Tata Nexon 15,239 கார்களை விற்பனை செய்துள்ளன. Baleno, Creta, Punch, Nexon, Ertiga, Brezza, Fronx, Swift, Wagon R, Scorpio முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
CM, Dy CM, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது, போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று கட்சியினருக்கு திமுக தலைமை தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இதேபோல் அறிவிப்பு வெளியானது. இருந்தபோதிலும், திமுகவினர் தங்களது செல்வாக்கை தலைமைக்கு காட்ட, பேனர்கள் வைத்தனர்.
பிரேசிலை சேர்ந்த இன்ஃப்ளூயென்சரான ரவேனா ஹன்னீலி தான், இப்போது இணைய வைரல். ஆம், ₹16 லட்சம் செலவில் கன்னித்தன்மையை திரும்பப் பெறும் hymenoplasty சர்ஜரியை செய்துகொள்ள போவதாக அறிவித்திருக்கிறார். தன் சுயமதிப்பை மீட்டெடுக்கவும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கவும் இம்முடிவுக்கு வந்துள்ளாராம். இந்தியாவிலும் இந்த சர்ஜரி செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததோடு, அவரது 9 வயது மகன் படுகாயமடைந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக படக்குழு, தியேட்டர் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ப்ரீமியர் காட்சியை அல்லு அர்ஜுன் காண சென்றதால் தான் அவ்வளவு கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு வழிகள் உள்ளன, அதனால் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி அடித்ததை அனுமதிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலின் போது மக்களின் துயர் புரியாமல் அரசு நடந்து கொண்டதே இதற்கு காரணம் என்பதை, அரசும் உணர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது பொன்முடி மீது சேறு வீசப்பட்டது.
Sorry, no posts matched your criteria.