India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நாளை 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், குடை, ரெயின் கோட்டை மாணவர்கள் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

‘ஆட்சியில் பங்கு’ என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு ‘ஆட்சியில் பங்கு’ கிடையாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அமைச்சர் <<18826821>>ஐ.பெரியசாமி<<>> பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த செல்வபெருந்தகை, ஐ.பெரியசாமிக்கு கருத்து குறித்து பதிலளிக்காமல் சென்றார்.

அமைதி வழியில் போராடும் இடைநிலை ஆசியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை காட்டுவதாக அண்ணாமலை சாடியுள்ளார். தனது X பதிவில் அவர், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத CM ஸ்டாலின், நிர்வாக தோல்வியை மறைக்க ஆசியர்கள் மீது போலீஸை ஏவுவதாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, கைதான ஆசிரியர் சங்கத்தின் 7 நிர்வாகிகளை விடுவிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Gen Z தலைமுறையினரால் நடத்தப்படும் போராட்டங்கள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அரசியல் சீர்திருத்தம், ஜனநாயக உரிமைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் எந்தெந்த நாடுகளில் Gen Z போராட்டம் நடந்துள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் தவிந்தர் சிங் (73) காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர், ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். விளையாட்டுத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், 2021-ல் தயான் சந்த் விருதை மத்திய அரசு வழங்கியது.

நாளை விஜய்க்கு மிக முக்கிய நாளாகும். கரூரில் 41 பேர் பலியான துயரம் தொடர்பான வழக்கில் டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் விஜய் நாளை நேரில் ஆஜராகிறார். இதற்காக நாளை காலை தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்லவுள்ளார். அதேநேரம், ‘ஜன நாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரிய மேல்முறையீட்டு மனு, அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வரவுள்ளதால், ஒட்டுமொத்த பார்வையும் விஜய் மீதே உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்துக்கு பெரிதும் உதவுகின்றன. இந்த உணவுகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்துகின்றன. அவை எந்தெந்த உணவுகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

நடிகை சம்யுக்தா மேனன் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரது பார்வையோ, உறங்கி கிடந்த மனதை உலுக்குகிறது. சத்தமில்லாமல் சத்தமிடும் ரத்தின கட்டியாக, சொக்கி நிற்க வைக்கிறார். வலை வீசும் நிலவொளி போலவும், சிறை வைக்கும் நிழல் போலவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை காங்., முன்வைத்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு பேரவை தேர்தலிலும் எங்கள் கட்சியும் தனியாக வாக்குறுதிகளை அளிக்கிறது, ஆனால் ஆட்சியில் பங்கு இருந்தால் மட்டுமே அதனை அமல்படுத்த முடியும் என அண்மையில் ஒரு பேட்டியில் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அதேநேரம், ஸ்டாலின் CM ஆக காங்., உழைத்ததாக குறிப்பிட்ட அவர், 2026 தேர்தலிலும் உழைக்க தயாராக இருக்கிறது என்றார்.

பெயர், இனிஷியல் (K.H), போட்டோஸ், குரல் & ‘உலகநாயகன்’ பட்டத்தை வணிக ரீதியில் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என கமல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையை சேர்ந்த ‘நீயே விடை’ நிறுவனம், T-ஷர்ட்டுகள் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். AI & Deep Fake மூலம் ஒருவரின் அடையாளத்தை தவறாக பயன்படுத்த முடியும் என்பதால், இந்தத் தடை அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.