India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CM, Dy CM, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது, போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று கட்சியினருக்கு திமுக தலைமை தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இதேபோல் அறிவிப்பு வெளியானது. இருந்தபோதிலும், திமுகவினர் தங்களது செல்வாக்கை தலைமைக்கு காட்ட, பேனர்கள் வைத்தனர்.
பிரேசிலை சேர்ந்த இன்ஃப்ளூயென்சரான ரவேனா ஹன்னீலி தான், இப்போது இணைய வைரல். ஆம், ₹16 லட்சம் செலவில் கன்னித்தன்மையை திரும்பப் பெறும் hymenoplasty சர்ஜரியை செய்துகொள்ள போவதாக அறிவித்திருக்கிறார். தன் சுயமதிப்பை மீட்டெடுக்கவும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கவும் இம்முடிவுக்கு வந்துள்ளாராம். இந்தியாவிலும் இந்த சர்ஜரி செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததோடு, அவரது 9 வயது மகன் படுகாயமடைந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக படக்குழு, தியேட்டர் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ப்ரீமியர் காட்சியை அல்லு அர்ஜுன் காண சென்றதால் தான் அவ்வளவு கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு வழிகள் உள்ளன, அதனால் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி அடித்ததை அனுமதிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலின் போது மக்களின் துயர் புரியாமல் அரசு நடந்து கொண்டதே இதற்கு காரணம் என்பதை, அரசும் உணர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது பொன்முடி மீது சேறு வீசப்பட்டது.
மத்தியில் மோடி ஆட்சி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மதுரை ஆதீனம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியை வீழ்த்தவே, INDIA கூட்டணியை திமுக ஆதரித்து வருகிறது. மேலும், மாநில உரிமையை பறிப்பதாகவும், ஹிந்தி திணிப்பதாகவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இப்படியான சூழலில், அதற்கு நேர் எதிராக ஆதீனம் பேசியுள்ளது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காற்றின் தரம் மேம்பட்டதால் அமலில் இருக்கும் GRAP-4 கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ளலாம் என SC தெரிவித்துள்ளது. காற்றின் தரம் மாறுபட இந்த GRAP கட்டுப்பாடுகளும் தீவிரமாகும். பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் பயிர் கழிவுகளுக்கு தீ வைப்பதை தடுத்ததால் டெல்லி NCR பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டதாக நாடாளுமன்றத்தில் அமைச்சகம் தெரிவித்தது. தற்போது காற்றின் தரம் (AQI) 161 Moderate அளவில் உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக இன்று மாலை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தை, வரும் 7ஆம் தேதிக்கு ICC ஒத்திவைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் சூழலில், அந்நாட்டிற்கு தங்கள் வீரர்களை அனுப்ப மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது. IND அணியின் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் வெளிநாடுகளில் நடத்துவதற்கும் பாக்., நிபந்தனைகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தெற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (டிச.7) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 12ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் எனவும் கணித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.
ஆண் ஆதிக்கம் மேலோங்கியிருந்த அரசியல் களத்தில் களமாடிய ஓர் பெண் ஆளுமை ஜெயலலிதா என ஆதவ் அர்ஜுனா புகழ்ந்துள்ளார். அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து தனது வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றி கண்ட தலைவி எனவும், தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் விட்டுக் கொடுக்காத இரும்புப் பெண்மணி எனவும் அவர் போற்றியுள்ளார். மேலும், இன்றைய நினைவுநாளில் அவரது பங்களிப்பை நினைவு கூர்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சையத் முஷ்டாக் தொடரில் மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் சதம் அடித்தார். முதலில் விளையாடிய மேகாலயா, 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் அபிஷேக் ஷர்மா தனி ஒருவனாக ரன் மழை பொழிந்தார். அந்த அணி 9.3 ஓவரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 பந்தில் சதம் அடித்த IND வீரர் உர்வில் படேலின் சாதனையை அபிஷேக் சமன் செய்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.