news

News November 29, 2024

48,000 புகைப்படங்களை தோற்கடித்த இரண்டு எலிகள்!

image

நீங்கள் மேலே பார்க்கும் புகைப்படம் இரண்டு எலிகள் சாதாரணமாக சண்டையிடுவது போல் தெரியும். ஆனால் இந்த புகைப்படம் தான் 2019ஆம் வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான LUMIX விருதை வென்றது. புகைப்படக் கலைஞர் சாம் ரவுலி லண்டனில் உள்ள சுரங்கப்பாதையில் எலிகள் சண்டையிடுவதை புகைப்படம் எடுத்தார். இப்போட்டியில் உலகளவில் இருந்து மொத்தம் 48,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 29, 2024

மீண்டு வாருங்கள், சமந்தா!

image

நடிகை சமந்தாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சோதனை மேல் சோதனையாகவே உள்ளது. விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம், ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்ட மயோசிடிஸ் பாதிப்பு, அடுத்தடுத்த சர்ச்சைகள் எல்லாமும் அவரை மனம், உடல் ரீதியாக பலவீனப்படுத்தின. எனினும், அவற்றிலிருந்து மீண்டு வந்தவருக்கு, தந்தையின் மரணம் பேரிழப்பாக அமைந்துவிட்டது. மனம் தளர வேண்டாம் சமந்தா! உறுதியாக மீண்டு வாருங்கள்!

News November 29, 2024

BREAK UP செய்வது குற்றமே அல்ல: சுப்ரீம் கோர்ட்

image

8 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால், கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அந்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேக் அப் செய்வது துன்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், அது தற்கொலைக்கு தூண்டக்கூடிய குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

News November 29, 2024

7 மாவட்டங்களுக்கு FLOOD WARNING!

image

ஃபெஞ்சல் புயல், நாளை கரையை கடக்கும் நிலையில், திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள சில நீர்நிலைகளில் மிதமானது முதல் அதிகமானது வரை வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 29, 2024

WARNING: மறந்து கூட இதை செய்துவிடாதீர்

image

மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை EB வெளியிட்டுள்ளது. *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். *வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால், மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. *நீரில் நனைந்த ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க கூடாது. *மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது.

News November 29, 2024

பொதுமக்களுக்கு… EB கொடுத்த அட்வைஸ்

image

*மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம். * மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். * மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. * மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.

News November 29, 2024

அறுந்துவிழுந்த மின்கம்பி அருகில் போகாதீங்க

image

மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். *டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர், கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். *வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

News November 29, 2024

ஜெய்ஸ்வாலை புகழ்ந்த மைக்கேல் வாகன்

image

உலகின் மிகவும் சிறந்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஆஸி. அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆஸி. பவுலர்கள் அவருக்கு எதிராக திணறி வருவதாகவும் குறை கூறினார். பவுன்சர் பந்துகளை வீசி பவுலர்கள் அவரை திணற செய்திருக்க வேண்டும் எனவும், அதை முதல் டெஸ்டில் ஆஸி.பவுலர்கள் செய்ய தவறிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News November 29, 2024

2,533 JOB.. ஜனவரியில் தேர்வு

image

தமிழகத்தில் 2,533 அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 428 முதுநிலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; 2,140 செவிலியர்களுக்கு டிச.2ஆம் தேதி பணி ஆணை வழங்கப்பட உள்ளது. 1,200 தொகுப்பு ஊதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

ஃபெஞ்சல் புயல்: ALERT மெசேஜ் வந்து விட்டதா மக்களே

image

பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி தமிழக அரசு, செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி எச்சரித்துள்ளது. நாளை பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது, 70 -90 கி.மீ. வேக காற்றுடன் கனமழை – அதி கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அலர்ட் கொடுத்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களை வாங்கி, மக்கள் இருப்பில் வைத்துக் கொள்வது நல்லது.

error: Content is protected !!