India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல விளம்பரங்களிலும் கிங் என தோனி நிரூபித்துள்ளார். TAM Media நடத்திய ஆய்வில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 42 விளம்பர நிறுவனங்கள் தோனியை ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும் ஒருநாளில் பாலிவுட் ஸ்டார்ஸ் அக்ஷய் குமார், ஷாருக்கான், அமிதாப் 16H முதல் 22H ஸ்க்ரீன் பிரசன்ஸில் உள்ளனர். ஆனால் தோனி 14H மட்டுமே ஸ்க்ரீன் பிரசன்ஸில் இருந்தாலும் அவர்களை விட அவரின் பிராண்ட் வேல்யூ அதிகம்.
‘புஷ்பா 2’ படத்திற்காக நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் உங்கள் புருவத்தை உயர்த்தும். விஜய்யின் சாதனையை முறியடித்து, இந்திய நடிகர்களிலேயே அதிகமாக, அல்லு அர்ஜுன் ₹300 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமார் ₹15 கோடியும், ரஷ்மிகா ₹10 கோடி, பகத் ஃபாசில் ₹8 கோடி, தேவி ஸ்ரீபிரசாத் ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளனர். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய ஸ்ரீலீலாவுக்கு ₹2 கோடி சம்பளமாம்.
மத்திய வங்கக் கடலில் நாளை (07.12.2024) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து 12ஆம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் வலுவான புயல் ஒன்று கடந்திருப்பதால் நாளை உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.
CIBIL ஸ்கோர் குறையும் பட்சத்தில் கடன் பெறுவதில் பெரும் சிக்கல் உண்டாகிறது. அப்படியாகும் சூழலில், CIBIL ஸ்கோரை மேம்படுத்தும் சில டிப்ஸை நிபுணர்கள் வழங்குகிறார்கள். அவற்றில் சில. *கிரெடிட் கார்டு பயன்பாடு 30% கீழ் வைத்திருங்கள் *கடன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தவும் *அடுத்தடுத்த கடன்களை பெற வேண்டாம் *உங்கள் பெயரில் பிறருக்கு கடன் கொடுக்காதீர்கள். உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸை சொல்லுங்க.
நவம்பர் மாதம் 14 ஆம் தேதி கங்குவா வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகல, அதுக்குள்ள OTT தேதி வெளியாகிவிட்டது. அமேசான் OTTயில் வரும் 13 ஆம் தேதி முதல் கங்குவா படம் வெளியாக இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்து, சிவா இயக்கிய பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படம் வெளியாகிறது.
தமிழக மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் திருக்குறள் போட்டியினை அரசு அறிவித்துள்ளது. இதில், ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி, கவிதைப் போட்டி, செல்ஃபி போட்டி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை வீடியோ, ஆடியோ அல்லது PDF வடிவில் வரும் 18ஆம் தேதிக்குள் tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அரசு தெரிவித்துள்ளது.
ஆஸி. அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2வது போட்டியில் ராகுல் செய்த சம்பவம் தான் இணையத்தில் ட்ரெண்டிங். போலந்தின் முதல் ஒவர், முதல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனதாக நினைத்து ராகுல் வெளியேறினார். ஆனால் அது நோ பால் என அம்பயர் கூறினார். இதில் வேடிக்கை என்ன வென்றால் பந்து கையுறையில் படவே இல்லை. மேலும் ராகுல் அவுட் ஆனதாக நினைத்து கோலியும் பவுண்டரி எல்லை வந்து திரும்பி சென்றார்.
2024இல் நிகழ்ந்த 1.68L விபத்துகளில் Helmet போடாததால் மட்டும் 30,000 பேர் பலியானதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மக்கள் பலர் ரோட்டில் Red சிக்னலில் நிற்பதில்லை, சட்டத்தை மதிப்பதே இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அதிக விபத்து நிகழ்ந்த இடங்களில் ₹40,000 கோடியில் தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். Please Obey Traffic Rules..
சென்னை குரோம்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 57 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில், குரோம்பேட்டை மருத்துவமனையில் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் 6 பேரும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
சட்டென பார்த்தால், எதுக்கு பணவிரயம் என தோன்றும். பூமியின் மேற்பரப்பில் அணுக்கழிவுகள் பரவாமல் பூமிக்கு அடியில் புதைத்து வைக்க இந்த ஓங்காலோ என பெயர் கொண்ட சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இது பின்லாந்தின் மேற்கு கடற்கரையான யூரஜோகி என்ற இடத்தில் சுமார் ₹7 ஆயிரம் கோடி செலவில் 1480 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. 2025ல் இருந்து 1 லட்ச வருடங்களுக்கு இச்சுரங்கம் மூடப்பட்டிருக்குமாம். ஆனா யாரு அப்போ திறப்பாங்க?
Sorry, no posts matched your criteria.