India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
₹70,000 கொடுத்தால் போதும் 15 நாளில் 8வது படிச்சவுங்களுக்கு கூட டாக்டர் பட்டம் கொடுத்த குஜராத் கும்பல் சிக்கியுள்ளது. BEMS பட்டத்தை இதுவரை 12,000 பேருக்கு அந்த கும்பல் வழங்கியுள்ளது. 14 போலி டாக்டர்களை பிடித்த போலீசார் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர். உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்ட போன காலம் போயி, உண்மையான டாக்டர் யார்ன்னு தேடுற காலம் வந்துரும்போல இருக்கே.. உங்க ஏரியாவிலும் இருக்கலாம் உஷார்..
சிவப்பு நிற பந்துக்கும், இளஞ்சிவப்பு நிற பந்துக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்து விளக்குகிறார் ஆஸி. ஜாம்பவான் பிரட் லீ. சிவப்பு நிற பந்தை விட இளஞ்சிவப்பு நிற பந்து பவுலர்களுக்கு நல்ல ஸ்விங் ஆகும். அதுவும் பகல்-இரவு போட்டியில் flood lights கீழ் விளையாடும் போது மேலும் ஸ்விங் ஆகும் என்பதால், பேட்டர்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும் என்கிறார்.
வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 11ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 11ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 12ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யவுள்ளது.
கங்கை நதி நீரை குமரிக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க மக்களவையில் MP விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதனை நிறைவேற்றினால் கங்கையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, தென் மாநிலங்களில் வறட்சியான பகுதிகள் செழிப்படையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இமயமலையில் உருவாகும் கங்கை இந்தியாவில் 11 மாநிலங்களிலும், வங்கதேசத்திலும் 2,500 கி.மீ பாய்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பால்ய நண்பரான ஆண்டனி டட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமணம் வரும் 12ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்காக அவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் கோவா சென்றடைந்தார். இதனை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘KA Wedding’ என்ற ஹேஷ்டேக்குடன் ‘And it begins’ என்ற தலைப்புடன் இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார்.
நடிகர் சிங்கமுத்து வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தையும் பேசக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னைப் பற்றி சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேசுவதாகவும் அவர் ₹5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வடிவேலு மனு அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வடிவேலு பற்றி கருத்து கூறக்கூடாது என்று சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டுள்ளது.
படிக்கும் போது சிரிப்பாக இருந்தாலும், இது ஒரு சீரியஸ் விஷயம் தான். ஆன்லைன் விளையாட்டில் கடன் வாங்கி தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு விழிப்புணர்வாக தான், தமிழக காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெசேஜ் அனுப்பி உஷார்படுத்துகிறது. அதில் இருக்கும் வாக்கியங்கள் தான் இவை. நீங்களும் விளையாடாதீங்க..உடன் இருப்பவர்களையும் உஷார்படுத்துங்க.
வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து நடக்க பழகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மண் தரையில் வெறுங்காலில் நடந்து பழகுங்கள் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அல்லது தரையில் படுத்து உறங்குங்கள் என்று சொன்னால் எப்படி செய்ய முடியும்? ஆனால், இவைதான் நம் ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சங்கள் என்பதுடன், தரையுடன் உடல் எப்போதும் தொடர்பில் இருப்பது எண்ணற்ற நன்மைகளை தரும் என்கின்றது லேட்டஸ்ட் ஆய்வு.
திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் போடவில்லை, அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மினிஸ்டர் SB எச்சரிக்கை விடுத்துள்ளார். CM ஸ்டாலின், அதானியை ரகசியமாகச் சந்தித்ததாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார். அதானி – ஸ்டாலின் ரகசிய சந்திப்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட பிரச்னை என்றாலும், தமிழ் சினிமாவில் விவாகரத்துகள் தொடர் கதையாகி விட்டன. இதனால் தனக்கு கல்யாணம் பண்ணவே பயமாக இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கல்யாணம் செய்து கொண்டால் நன்றாக வாழணும், நமக்கு இந்த விவாகரத்து எல்லாம் செட் ஆகாது என்கிறார் ஐஸ்வர்யா. ஒருவரை பார்த்தால் காதலித்து கல்யாணம் பண்ணணும்னு தோன்றும், அப்படிப்பட்ட ஒருவரை, தான் இன்னும் சந்திக்கவே இல்லை என்றும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.