India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிகவின் ஆதவ் அர்ஜுனா, மேடையில் திருமா இல்லாவிட்டாலும், அவர் மனசாட்சி இங்குதான் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் இனி மன்னர் ஆட்சிக்கு இடமில்லை, மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மறைமுகமாக திமுகவை விமர்சித்த அவர், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக உருவாக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
‘மகாராஜா’ திரைப்படம் கடந்த நவ.29ஆம் தேதி சீனாவில் ரிலீசான நிலையில், ஒரு வாரத்தில் ₹40 கோடி அப்படம் வசூலித்துள்ளது. இதன்மூலம் உலகளவில் நேற்றுவரை ₹150 கோடியை வசூலை குவித்துள்ளது. சீனாவில் அதிக வசூல் செய்த ‘2.0’, ‘கனா’, ‘மெர்சல்’ ஆகிய படங்களின் வரிசையில் தற்போது ‘மகாராஜா’வும் இணைந்துள்ளது. சீன ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இன்னும் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள கோலி சிரமப்படுவதாக சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். அவரின் பேட்டிங் சராசரி 48 ஆக சரிந்ததற்கு இதுதான் முக்கிய காரணம் என்றும், இதை சரிசெய்ய கோலி முயற்சிக்காமல் இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் கோலி தனது விக்கெட்டை தொடர்ந்து பறிகொடுப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சலோ போராட்டத்தில் களமிறங்கியுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் இவை. *பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான லீகல் கேரண்டி *விவசாய கடன் தள்ளுபடி, விவசாயி/ விவசாய கூலிகளுக்கு ஓய்வூதியம், மின்சார கட்டண உயர்வு தடுப்பு, போராட்ட வழக்குகள் தள்ளுபடி, லக்ஷ்மிபூர் கேரி வன்முறை வழக்கில் நீதி *நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013 மீண்டும் கொண்டுவருதல், உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணப் பணிக்காக தமிழ்நாட்டுக்கு ₹944.80 Cr வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்தியக் குழு நாளை முதல் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது. அந்த குழு அறிக்கை அளித்த பின், கூடுதல் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. முன்னதாக புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு உடனடியாக ₹2000 Cr வழங்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அமேசான் நிறுவனத்தை விட்டு வெளியேறி 3 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அதன் செயல்பாடுகளில் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இணைந்துள்ளார். AI-யில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள், மைக்ரோசாஃப்ட், OpenAI நிறுவனங்களுக்கு போட்டியாக, சக்தி வாய்ந்த சூப்பர் கம்யூட்டர் உருவாக்கத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, அவரது Blue Origin விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கவனம் செலுத்த, அமேசான் CEO பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 முதல் நாளில் ₹294 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவே அதிக வசூலாகும். ‘RRR’ படத்தின் முதல் நாள் வசூலான ₹222 Cr சாதனையை முறியடித்து, முதல்நாளில் அதிகபட்ச ஓப்பனிங் கொண்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும், இந்தியில் இப்படத்தின் முதல் நாளில் ₹72 Cr வசூலித்துள்ளது.
பயனர்களை கவரும் வகையில் புதுபுது அப்டேட்களை இன்ஸ்டாகிராம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மெசேஜ்களை Schedule செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜை டைப் செய்துவிட்டு Send பட்டனை Long Press செய்தால் Schedule ஆப்ஷன் காட்டும். அதில் மெசேஜ் Send ஆக வேண்டிய தேதி மற்றும் நேரத்தை செலக்ட் செய்யலாம். சமீபத்தில் லைவ் லொகேஷன் ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது.
12ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்தாலும், கல்லூரியில் விரும்பிய பிரிவில் படிக்கலாம் என்ற UGCயின் திட்டம் என்பது நுழைவுத் தேர்வை திணிக்கும் முயற்சி என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். நுழைவுத்தேர்வுகள் சமூகநீதிக்கு எதிரானவை என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதனால் பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய், பயிற்சி மையங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
தென்னிந்திய நடிகை பிரக்யநக்ராவின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. X தளத்திலும் #pragyanagra என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. ஹரியானாவை சேர்ந்த இவர், தமிழில் அறிமுகமாகி, தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில், நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளியான நிலையில், இப்போது பிரக்யநக்ராவின் வீடியோ லீக் ஆகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.