India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பானின் பிரபல பாப் ஸ்டாரும் நடிகையுமான மிகோ நகயாமா (54), டோக்கியோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் நடித்து வெளியான ‘லவ் லெட்டர்’ படம் பிரபலமானது. கிறிஸ்துமஸ் கான்செர்ட் ஒன்றில் அவர் பங்கேற்க இருந்த நிலையில், உடல்நலம் சரியில்லாததால், அந்த நிகழ்ச்சி கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் வீட்டு பாத்ரூம் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பேத்கர் பற்றி யோசிக்கும்போது, சட்டம் ஒழுங்கு, சமூகநீதியை பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இன்றும் மணிப்பூரில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை கண்டுகொள்ளாத அரசு நம்மை மேல் இருந்து ஆண்டு கொண்டிருக்கிறது. அங்கு தான் அப்படியென்றால், இங்கு சமூக நீதி பேசும் அரசு, வேங்கைவயல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று திமுகவை விமர்சித்தார்.
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை ஜனநாயக உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டில் பேசியவர், ஜனநாயகம் காக்கப்பட நியாயமான, சுதந்திரமான தேர்தல் வேண்டும் எனவும் அதற்கு ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
அம்பேத்கர் நூல் வெளியிட்ட விழாவில் பங்கேற்றது ஒரு வரமாக நினைக்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். சாதி படிநிலையால் அம்பேத்கர் பட்ட கஷ்டங்களை குறிப்பிட விஜய், வன்மத்தை மட்டும் காட்டிய இந்த சமூகத்திற்கு அம்பேத்கர் திரும்பி என்ன செய்தார் என்பதை நினைத்தால் மெய்சிலிர்கிறது எனக் கூறினார். சாதி, மதங்கள் குறித்தும் அவர் மிகத் தெளிவாக பேசியுள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுன், “சாதி, மதம் இரண்டோடு ஊழல் என்ற ஒன்றையும் இணைத்து அரசியல் பேசிட வேண்டும்” என்றார். திராவிட, இடதுசாரி கட்சிகள் சாதி, மத அரசியலை எதிர்த்தாலும், ஊழல் எதிர்ப்பில் அடக்கி வாசிக்கின்றன. வலதுசாரி கட்சிகளோ ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி சாதி, மதவாத எதிர்ப்பை கண்டுகொள்வதில்லை. நீங்கள் எந்த அரசியலை ஆதரிக்கிறீர்கள்?
இந்த ஆண்டில் 50 விக்கெட்களை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். ஆஸி.,க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் இன்றைய ஆட்டத்தில், கவாஜாவை அவுட் ஆக்கி, இந்த ஆண்டின் 50ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், இந்திய டெஸ்ட் வரலாற்றில் இந்த சாதனையை 3ஆவது பவுலராக பும்ரா இணைந்துள்ளார். முன்னதாக, கபில் தேவ் மற்றும் ஜாஹிர் கான் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூலை’ தவெக தலைவர் விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். அதன்பின், தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கு அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வழங்கினார். புத்தகம் வழங்கியபோது, விஜய்யுடன் வேங்கைவயலை சேர்ந்த பெண் கண்ணீருடன் பேசினார். இதனால், கலங்கிய அவர் அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விசிகவின் ஆதவ் அர்ஜுன் பேசியது தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங். ஒருபக்கம் மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென திமுகவை தாக்கிவிட்டு, “கருத்தியல் பேசிய கட்சிகள், ஏன் அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை?” எனக் கேள்வி எழுப்புகிறார். மேலும், கருத்தியல் தலைவர் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்றார். ஆதவ் குறிப்பிடும் கருத்தியல் தலைவர் யார்- திருமாவா? விஜய்யா?
தற்போதைய தலைமுறையில் பெரும்பாலானோர் ஜீன்ஸ் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும் சிலர் இரவிலும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து தூங்குவார்கள். ஆனால் இப்படிச் செய்தால் உடல் வெப்பம் அதிகரித்து நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் பூஞ்சை தொற்றுக்கு, ஒவ்வாமை, அலர்ஜி, முதுகுவலி, வீக்கம், பாலியல் ஆரோக்கியம் போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. இரவில் இவற்றை அணியாமல் இருப்பது நல்லது.
சிறு, குறு விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், பிணையம் இல்லாத விவசாயக் கடன்களுக்கான வரம்பை ₹1.6 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக RBI உயர்த்தியுள்ளது. உணவு பொருட்கள் மீதான பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மலிவாக மற்றும் எளிதாகக் கிடைக்கும் கடனை அதிகரிப்பதன் மூலம், நிலையான விவசாய உற்பத்தியை மேம்படுத்த RBI முடிவு செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.