India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக கூட்டணிக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசி வருவது உண்மை தான் என்று திருமா ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் பேச்சு விசிகவின் கருத்து இல்லை, அவரின் தனிப்பட்ட கருத்து. ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்ட பிறகு, கலந்து பேசி முடிவெடுக்கப்படும் எனக் கூறிய அவர், விஜய் சொல்வது போல் கூட்டணிக் கட்சிகளால் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. திமுக கூட்டணியில் தொடர்கிறோம்; தொடருவோம் என்று தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் மீது பாக். அரசு நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. அசார் தங்கள் நாட்டில் இல்லை என பாக். கூறிவரும் நிலையில், சமீபத்தில் அங்கு நடந்த கூட்டத்தில் அசார் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், தீவிரவாத நடவடிக்கைகளை பாக். ஆதரிப்பதாக அர்த்தம் என MEA செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு 12,500 வார்த்தைகளும், பெண் 22,000 வார்த்தைகளும் பேசுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பெண் சராசரியாக ஒரு நாளைக்கு 4 பொய்கள் வீதம், 60 வயதிற்குள் 87,600 பொய்கள் சொல்கிறார். பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 30-64 முறை அழுகிறார்கள்; ஆண்கள் 6- 17முறை அழுகிறார்கள். பெண்களுக்கு கேட்கும்திறன் அதிகம்; ஆண்களுக்கு பார்க்கும் திறன் அதிகம். வேறு என்னென்ன வித்தியாசம் இருக்கு?
Thalassemia என்ற கொடிய நோயில் இருந்து குழந்தைகளைக் காக்க, திருமணத்திற்கு முன்பே அதற்கான பரிசோதனை செய்வது அவசியம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். நாட்டில் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்களுக்கு இந்த பிரச்னைகள் இருந்தால் அது குழந்தைக்கும் பரவும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கடுமையாகக் குறையும். சோர்வு, தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
சத்தான உணவான சாண்ட்விச் ஏன் ஆபத்தாகிறது? சாண்ட்விச் தயாரித்த சில மணிநேரத்தில் பயன்படுத்திவிட வேண்டும். சாதாரண அறை வெப்பநிலையில் 2-4 மணிநேரமே அது கெடாமல் இருக்கும். சூடாக அலுமினியம் ஃபாயிலில் வைத்தால் இன்னும் கொஞ்ச நேரம் தாங்கும். அதன்பின், அதிலுள்ள பொருள்கள் (இறைச்சி, வெண்ணெய், மயோனீஸ், காய்கறி, முட்டை போன்றவை) கெடத் தொடங்கிவிடும். ஆனால், பேக்கரிகளில் 2 நாள்கள் கூட வைத்திருக்கிறார்கள் தெரியுமா?
திமுகவுக்கு தவெக தலைவர் விஜய் நேரடியாக சவால் விடுத்துள்ளார். மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை உரிமையான சமூகநீதி பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் இருக்கும் 200 வெல்வோம் என்று கூறும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன். 2026 தேர்தலில் உங்கள் (திமுக) கூட்டணியை மக்களே மைனஸ் ஆகி விடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய்க்கு, விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வழங்கிய புகைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் கையை விஜய் பிடித்துள்ளதை போன்று தத்ரூபமாக படம் வரையப்பட்டிருந்தது. அதை சில வினாடிகள் ஆச்சரியம் விலகாமல் பார்த்த விஜய், சிரித்த முகத்துடன் அதனைப் பெற்றுக் கொண்டார்.
விஜய்க்கு வேலை பார்ப்பவர் ஆகிவிட்டார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா என்று அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான ஆளூர் ஷாநவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவுக்கு பின் அரசியல் கணக்கு இருக்கிறது எனக் கூறிய அவர், ஆதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை திருமா எடுப்பார் என்றும் கூறியுள்ளார். இதனால், ஆதவ், விசிகவில் இருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அம்பேத்கர் தனது 9 வயதில் பட்ட கஷ்டம் தன்னை மிகவும் பாதித்ததாக விஜய் தெரிவித்துள்ளார். தனது அப்பாவை பார்க்க அம்பேத்கரும் அவரது சகோதரரும், வெளியூர் சென்ற போது, சாதியை காட்டி மாட்டு வண்டிக்காரர் அவர்களை ஏற்ற மறுத்தாராம். காசு அதிகம் கொடுப்பதாக சொன்ன பிறகே வண்டியில் ஏற அனுமதித்தாராம். ஆனால் அதை விட கொடுமை, சிறுவர்களை ஏற்றிவிட்டு தீண்டாமை காரணமாக வண்டிக்காரர் நடந்தே சென்றதையும் விஜய் பகிர்ந்துள்ளார்.
அதேபோல், வெளிநாடுகளில் படித்துவிட்டு இங்கு அரசு அதிகாரியாக பணியாற்றிய அம்பேத்கரை, மும்பைக்கு அருகே உள்ள கிராம மக்கள் மாட்டு வண்டியில் அழைத்து வர முடிவு செய்தனர். ஆனால், அம்பேத்கருக்கு சமமாக அமர்ந்து வண்டி ஓட்ட வண்டிக்காரர் மறுக்கிறார். லண்டனில் பட்டம் பெற்றவரை விட தான் உயர்ந்தவர் என வண்டிக்காரர் நினைத்தது தன்னுடைய வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக விஜய் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.